tag:blogger.com,1999:blog-4194027626261768144.post422055707727237051..comments2024-03-29T16:45:59.220+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: பத்தாம் வகுப்பு மாணவா்கள் நாளை முதல் வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்யலாம்kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-68286010777131613912020-10-22T20:55:32.018+05:302020-10-22T20:55:32.018+05:30*தனியார் கல்வி நிறுவன ஆசிரியன் கொரானா குமுறல்கள்*
...*தனியார் கல்வி நிறுவன ஆசிரியன் கொரானா குமுறல்கள்*<br /><br />மார்ச் 2020 முதல் இந்த மாதம் முடிய வரை அதாவது கடந்த 8 மாதங்களாக குறை சம்பளம் மற்றும் சம்பளமே இல்லாமல் அவதிப்படும் ஒரே சமூகம் தனியார் கல்வி நிறுவன ஆசிரியர் சமூகம் மட்டுமே....<br /><br />எட்டு மாதங்களாக வாங்கும் 8000 - 15000 சம்பளத்தில் 20% அல்லது 30 சதவீதத்தில் <br />சம்பளத்தோடு அல்லது சம்பளமே இல்லாமல் மிகவும் கடினப்பட்டு வேதனைவோடு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். தனியார் கல்வி ஆசிரியர் பெருமக்கள்.....<br /><br />இதைப் பற்றி பேசவோ??? ஆலோசிக்கவும்.<br /> எவருக்கும் திராணி இல்லை....<br /><br />மற்ற அனைத்து துறைகளும் <br />சாதாரண சூழ்நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன...<br /><br />தனியார் கல்வி ஆசிரியர்கள் <br />தின கூலி வேலை, <br />தேங்காய்,காளான் விற்க, <br />பஜ்ஜி கடை,<br />காய்கறி கடை வைத்தும், இரவு நேர வாட்ச்மேன் வேலை, கம்ப்யூட்டர் சென்டர்களில் ஜெராக்ஸ் போட<br />இப்படி பல்வேறு வேலைகளில் தங்களை ஈடுபடுத்தி அதுவும் சரியாக இல்லாமல் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர்.<br /><br /> ஆசிரியர் பணி அறப்பணி, <br />இன்று<br /> மறுவி <br />ஆசிரியர் பணி தெரு பணியாகி உள்ளது <br /><br />ஆனால் நிகழ் அலை நேரடி வகுப்புகள் அதாவது ஆன்லைன் வகுப்புகள் எனக்கூறி மாணவர்களிடம் சரியான கல்வி கட்டணத்தை பெற்று வருகின்றனர்...<br /><br />அனைத்தும் சரியாகவே நடந்து வருகிறது தனியார் ஆசிரியனின் சம்பளத்தை தவிர...<br /><br />வங்கிகளில் பர்சனல் லோன் அல்லது வேறு கடனும் பெற்றிருப்பின் அவர்கள் தவணை செப்டம்பர் மாதத்திலிருந்து கட்ட உந்தப்பட்டு உள்ளனர்...<br /><br /> ஏன் இந்த தனியார் ஆசிரியர் தொழிலுக்கு வந்தோம் ????<br /> என நித்தமும் மன வேதனையுடன் உள்ளனர்.....<br /><br />கொரானா பாதிப்பை விட இந்த பாதிப்பு அவர்களை மட்டுமல்ல அவர்களை சார்ந்த குடும்பத்தையும் பெரும் பாதிப்படைந்துள்ளனர்....<br /><br />தனியார் கல்வி ஆசிரியர் நிலை நாதியற்ற நிலையாக உள்ளது....<br /><br />அட்மிஷன் சேர்க்கை, <br />கல்வி கட்டண வசூல், மாணவர்களுக்கு பாடம் கற்பித்தல்,<br />வருகைப் பதிவை தக்கவைத்தல்,<br />மாணவர் வருகை குறைந்தால் அதற்கு சரியான நடவடிக்கை எடுத்தல்,<br />ஒழுக்க நெறி முறைகளை கற்றுக் கொடுத்தல்,<br />உணவு இடைவேளைகளில் கூட ஒழுக்க கண்காணிப்பாளராக இருத்தல்,<br />நிர்வாகம் , மாணவர்கள் மற்றும் பெற்றோர் இவர்களுக்கு ஒரு ஊடகமாக இருந்து சமநிலையில் செயல்படுதல்,<br />ஒழுங்கு படுத்தும் விதமாக மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்தல்,<br />தேர்வில் மதிப்பெண் குறைந்தால் அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துதல்,<br />விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்காக சிறப்பு வகுப்புகள்,<br />படிப்பில் கவனக் குறைவாக உள்ள மாணவர்களுக்கு மாலை சிறப்பு வகுப்புகள்...<br /><br />இவ்வாறு கத்தி கத்தி ஓடாக உழைத்து<br />தனியார் பள்ளி ஆசிரியர்கள்.<br /> <br />காலை7 -8 மணி <br />இரவு 5-10 மணி வரை தினமும் தனி வகுப்புகள் என<br /> நிர்வாகத்திற்காக 100 என்ற சதவீதத்தை நோக்கி ஓடி.... <br />மன அழுத்தத்தில்.....<br /><br />ஒட்டு மொத்த மாணவர்களின் வளர்ச்சிக்காக மேம்பாட்டிற்காக உழைத்த தனியார் கல்வி ஆசிரியர்களுக்கு இன்று சரியான கூலிகள் இல்லாத, சம்பளம் இல்லாத , <br /><br />பிச்சை எடுக்காது குறைகளுடன்.......<br /><br />அரசாங்கமும் இதுவரையில் தனியார் கல்வி ஆசிரியர்களுக்கு முழு சம்பளம் கொடுக்க எந்த ஒரு ஆணையும், <br />வாதமும் செய்யவில்லை......<br /><br />*தனியார் ஆசிரியன்*<br />*ஒரு நாதியற்றவன்*<br />*பாவப்பட்டவன்*இந்த செய்தியை நமது மாண்புமிகு முதல்வர் அவர்கள் பார்க்கும் வரை அனைவரும் பகிரவும், ஆசிரியர் மீது பற்றுள்ள அனைவரும் இச்செய்தியை பகிருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்Ilavarasan Rhttps://www.blogger.com/profile/08298939703065974945noreply@blogger.com