tag:blogger.com,1999:blog-4194027626261768144.post8018680054722196874..comments2024-03-28T14:55:49.315+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: சிறப்பாசிரியர்கள் நியமனத்தில் தகுதியான ஆசிரியர்கள் இல்லை என்பதால் தெரிவுப்பட்டியலில் பணியிடம் குறைத்துக் காட்டப்பட்டுள்ளது எனTRB விளக்கம்!kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-25263094281025329912018-12-30T11:00:15.848+05:302018-12-30T11:00:15.848+05:30முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வகையில் ஆசிரிய...முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் செயல் பட்டு வருகின்றது என்பது எல்லோருக்கும் மிகவும் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.இது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கையாலாகாத செயலுக்காண முன்னுதாரணம் என்று தான் சொல்லவேண்டும் ஆசிரியர் பணிக்கு போட்டி தேர்வு நடத்தும் அருகதை ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு இனி கிடையாது.என்பதால்தான் இனிவரும் காலங்களில் அரசுப்பணியாளர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் பல்வேறுவிதமான குளறுபடிகளை செய்து சிறப்பாசிரியர் நியமனத்தில் பட்டியல் வெளியீடு செய்து விட்டு தற்போது தகுதி வாய்ந்த நபர்கள் இல்லை என்று கூறுவது ஏற்புடையது அல்ல அனைத்து பிரிவுகளிலும் போட்டி தேர்வு எழுதி மதிப்பெண் பெற்று அடுத்த நிலையில் உள்ளவர்களின் பெயர்களைக் பட்டியலில் இடம்பெறாமல் நிறுத்தி வைத்துள்ள நிலையில் இன்று இப்படிப்பட்ட பதிலை ஆசிரியர் தேர்வு வாரியம் கூறுவது நகைப்புக்குறியது. இதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது என்பதை தெள்ளத்தளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.அனைத்து போட்டி தேர்விலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்பாடு மிகவும் மோசமான நிலையில் இருந்து வரும் நிலையில் இப்போது சிறப்பாசிரியர் நியமனத்தில் நடைபெற்று வரும் பல்வேறுவிதமான சர்ச்சைகளுகு ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க முடியாமல் போகும் நிலையில் உள்ளது எனவே தகுதி வாய்ந்த நபர்களுக்கு மறுபரிசீலனை செய்து முறையான கல்வித்தகுதி மற்றும் மதிப்பெண் பெற்று அடுத்த நிலையில் உள்ளவர்களின் ஒட்டுமொத்த நலன்கருதி மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முறையாக பட்டியல் வெளியீடு செய்து விட்டு பணி நியமன ஆணைகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தகுதிவாய்ந்த தேர்வர்களின் பணிவான வேண்டுகோள்.A.umar farookhttps://www.blogger.com/profile/15204390922832391606noreply@blogger.com