இந்தியா முழுவதும் ஒரே அட்டையில் பேருந்து மற்றும் ரயிலில் பயணிக்கலாம்: விரைவில் அறிமுகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 1, 2015

இந்தியா முழுவதும் ஒரே அட்டையில் பேருந்து மற்றும் ரயிலில் பயணிக்கலாம்: விரைவில் அறிமுகம்

இந்தியாவின் எந்த ஒரு ஊரிலும் உள்ள மெட்ரோ ரயில்கள், வழக்கமான ரயில்கள், பேருந்துகளில் பயணிப்பதற்காக பொதுவான ஒரு பயண அட்டையை அறிமுகப்படுத்த மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.


பயணத்திற்கு மட்டுமல்லாமல் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கும் இந்த அட்டை பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் மொபிலிடி கார்டு எனப்படும் இவ்வகை அட்டைகளை குறித்த காலத்திற்குள் அறிமுகப்படுத்தவும் இதற்காக மாநிலங்களுக்கு இடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.வெளிநாடுகளில் இது போன்று செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் கார்டு திட்டங்கள்குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக நகர்ப்புற வளர்ச்சி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் தலைமையில் ஒரு கமிட்டி இது தொடர்பான பணிகளை கவனித்து வருகிறது.​

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி