மாணவர்களை வறுத்தெடுக்கும் பொதுத்தேர்வு பிளஸ் 2 வேதியியல் கேள்விகள் கடினம்: மாணவர்கள் புலம்பல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 27, 2018

மாணவர்களை வறுத்தெடுக்கும் பொதுத்தேர்வு பிளஸ் 2 வேதியியல் கேள்விகள் கடினம்: மாணவர்கள் புலம்பல்

பிளஸ் 2 வேதியியல் தேர்வில் இடம் பெற்ற கேள்வித்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவ, மாணவியர் தெரிவித்தனர். பிளஸ் 2 தேர்வு கடந்த 1ம் தேதி தொடங்கியது.
மொழிப்பாடத் தேர்வுகள் கணக்கு, இயற்பியல் தேர்வுகள் முடிந்த நிலையில் நேற்று வேதியியல்  பாடத்துக்கான தேர்வு நடந்தது. அதில் இடம் பெற்ற கேள்வித்தாளில் கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகள் எளிதாக இருந்தாலும் 3 மதிப்பெண்  கேள்விகள் 20 கொடுத்து அதில் 15 எழுத வேண்டும் என்று கேட்கப்பட்டது. அந்த கேள்விகள் பெரும்பாலும் கடினமாக இருந்தன. குறிப்பாக 15  கேள்விகள் தெரிவு செய்து எழுத வேண்டிய நிலையில் குறிப்பிட்ட சில கேள்விகளுக்கு மட்டுமே பதில் எழுத முடிந்ததாக மாணவ மாணவியர்  தெரிவித்தனர்.

ஒரு மதிப்பெண் கேள்விகளில் 4 கேள்விகள் பாடப்பகுதியில் உள்ளே இருந்து எடுத்து சுயமாக கேட்கப்பட்டு இருந்தது. கட்டாய  கேள்வியாக கேட்கப்பட்ட 70 வது கேள்வி பலருக்கு எளிதாக இருந்த நிலையில் பெரும்பாலான மாணவர்களுக்கு கடினமாக இருந்துள்ளது. அதனால்  சென்டம் குறையும் வாய்ப்புள்ளதாக மாணவ- மாணவியர் தெரிவித்தனர். இதையடுத்து ஏப்ரல் 2ம் தேதியுடன் பிளஸ் 2 தேர்வு முடிவுக்கு வருகிறது.

34 பேர் சிக்கினர்

பிளஸ் 2 வேதியியல் மற்றும் கணக்குப்பதிவியல்  தேர்வில் பறக்கும் படையினர் நேற்று அனைத்து தேர்வு மையங்களிலும் அதிரடி சோதனையில்  ஈடுபட்டனர். அவர்களுடன் அண்ணா பல்கலைக் கழக பறக்கும் படையும் சோதனையில் ஈடுபட்டது. அப்போது பிட் அடித்ததாக மதுரை2, ஈரோடு 1,  சேலம் 2,கரூர்1, அரியலூர்1, திருச்சி 6, விழுப்புரம் 21 பேர் என மொத்தம் 34 பேர் பறக்கும் படையிடம் சிக்கினர். அவர்கள் மீது துறை ரீதியான  நடவடிக்கை எடுக்க பறக்கும் படையினர் பரிந்துரை செய்தனர்.

3 comments:

  1. 1) 765 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் TRB ANNUAL PLANNER-2018ல் இடம்பெறாததிற்கான உண்மையான காரணம்: NCERT-ன் தற்போதைய விதிகளின்படி 765 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர்கள் பணியிடம் என்பதால் கணினி பயிற்றுநர் பணியிடம்(முதுகலை கணினி ஆசிரியராக தரம் உயர்த்தப்பட்டு அரசாணை பெறப்பட்ட பின்னர்)TRB மூலம் நிரப்பப்படும்: CM CELL REPLY: Dt: 27/02/2018 Click Here

    https://kaninikkalvi.blogspot.in/2018/03/765-trb-pg-with-bed-765.html

    More Official News - kaninikkalvi.blogspot.in

    ReplyDelete
  2. *🖥 கணினி அறிவியல் பாடம் தமிழக அரசு பள்ளிகளில் 6வது தனி பாடமாக 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கொண்டுவருவதற்கான கணினி ஆசிரியர்களின் கோரிக்கை மனு NCERT- ஆல் ஏற்கப்பட்டதா? தெரிந்துகொள்ள!!👇*

    *📝 NCERT REPLY: Date:26/03/2018.*


    🔖 To Create Computer Science As Sixth Subject From 6 To 10th Standard TN School Curriculum: NCERT REPLY As Date on 26/03/18...

    ♨https://kaninikkalvi.blogspot.in/2018/03/6-6-10-ncert-ncert-reply-date26032018.html?m=1

    🖥kaninikkalvi.blogspot.in📚

    *🛡Share To All CS Group🤝🏻👆🏻*

    ReplyDelete
  3. 🅱💢 பள்ளிக்கல்வி - மேல்நிலைப் பள்ளிகள் - தொழிற்கல்வி ஆசிரியர்(🖥கணினி அறிவியல்)117 தற்காலிக பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது.01/01/2018 முதல் 31/12/2018 முடிய ஒரு வருட தொடர் நீட்டிப்பு ஆணை வெளியிடப்படுகிறது📝

    117 தற்காலிக கணிணி அறிவியல் ஆசிரியர்களின் முழுவிவரங்கள் அடங்கிய பட்டியல்📝

    117 Computer Science Teachers Post  One Year(2018) Continuation Order Released 117 Teachers Complete List With Full Details) 👉 Click Here To Download(PDF)

    🛡 https://kaninikkalvi.blogspot.in/2018/03/117-01012018-31122018-117-one-year2018.html?m=1

    🅱💢1880 கணினி பயிற்றுநர் தற்காலிக பணியிடங்களுக்கு 01.01.2018 முதல் 31.12.2018 முடிய ஓராண்டிற்கு தொடர் நீட்டிப்பு ஆணை வெளியீடு 👉 Click Here To Download(PDF)

    🛡 https://kaninikkalvi.blogspot.in/2018/03/1880-01012018-31122018.html?m=1

    ⚠More Official News 📝

    🖥kaninikkalvi.blogspot.in📚

    🚀Share To All CS Teachers Groups

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி