கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு தடை கோரி வழக்கு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 30, 2018

கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு தடை கோரி வழக்கு

கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
வேலூர் மாவட்டம் தக்கோலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் உப்பு உற்பத்தி மற்றும் விற்பனை கூட்டுறவு சங்கங்களின் தேர்தலுக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக வேலூரைச் சேர்ந்த அசோக்குமார் உள்ளி்ட்ட 4 பேர் மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மாசிலாமணி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக கூட்டுறவு சங்க அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

எதிர்க்கட்சி வேட்பாளர்களின் மனுக்களை அவர்கள் பெறுவதில்லை. மீறிப் பெற்றாலும் அற்ப காரணங்களைக் கூறி அவற்றை நிராகரித்து வருகின்றனர். தற்போதுள்ள சூழலில் தேர்தல் நடந்தால் அது முறையாக நடக்காது. எனவே தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறுஅதில் கோரியுள்ளனர்.

1 comment:

  1. Enda election announce pannuna thadai kepinga announce pannalana govt blame pannuvinga unkalathiruthve mudiyathuda

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி