இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலத் துணைச் செயலாளர் நா.சண்முகநாதன், "தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாகப் பணிபுரிவோருக்கு, அந்தந்த ஒன்றியத்தில் உள்ள காலி பணியிடங்களின் அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும். இது வழக்கமாக நடந்துவரும் நடைமுறை. பொதுவாக, ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பணியிடம் வரும். சில ஆண்டுகள் வராது. இதற்காக இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டும். பதவி உயர்வுக்கான அறிவிப்புகள் வரும்போது, தங்களது உடல்நிலை, குடும்ப சூழ்நிலை காரணமாகச் சம்பந்தப்பட்ட, தகுதியுள்ள ஆசிரியர்கள், தங்களுக்கான பதவி உயர்வை தற்காலிகமாக வேண்டாம் என்று கூறலாம். இதனால் மூன்று ஆண்டுகளுக்கு அவர்களுக்கு பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்படும். அதேசமயம், ஒவ்வோர் ஆண்டு தயாரிக்கப்படும் முன்னுரிமைப் பட்டியலில் இவர்கள் பெயர் முதலாவதாக இருக்கும். அவர்களது பெயருக்கு அருகிலேயே மூன்று ஆண்டுகள் பதவி உயர்வு துறப்பு என எழுதி வைத்திருப்பார்கள். பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தும்போது, பதவி உயர்வு வேண்டாம் என்பவர்கள். கலந்தாய்வு நடைபெறும் இடத்திற்குச் சென்று 3 ஆண்டுகள் பதவி உயர்வு துறப்பு செய்வதாக எழுதித் தர வேண்டும்.
2015-16 ம் கல்வியாண்டுக்கான தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு கடந்த 2015 மே மாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மாநிலம் முழுவதும் காலதாமதமாக 17.8.2015-ம் தேதி நடைபெற்றது. அப்போது சிலர் தங்களது சூழ்நிலை காரணமாகப் பதவி உயர்வை வழக்கத்தின்படி தற்காலிகமாக 3 ஆண்டுகளுக்கு வேண்டாம் என எழுதிக் கொடுத்துள்ளார்கள். எழுதிக் கொடுத்த 2015-16, 2016-17, 2017-18 ஆகிய மூன்று கல்வியாண்டு இந்த ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில், 17.8.2015 தேதியன்று 3 ஆண்டுகளுக்கு பதவி உயர்வு துறப்பு செய்தவர்களுக்கு வரும் மே மாதம் நடைபெறும் 2018-19 கல்வியாண்டுக்கான கலந்தாய்வில் பதவி உயர்வு தர வேண்டும். ஆனால், இவர்கள் 2019-20-ம் கல்வியாண்டு பதவி உயர்வுக்குதான் அழைக்கப்படுவார்கள் என்று சுற்றறிக்கை தற்போது வந்துள்ளது. அரசாங்கத்தின் உத்தரவு 3 ஆண்டுகள் பதவி உயர்வு துறப்பு என்று இருந்தாலும், 4 கல்வியாண்டுகள் கழித்தே பதவி உயர்வு வழங்கப்படுவது ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் பதவி உயர்வு பட்டியல் ஜனவரி 1-ம் தேதி தயாரிக்கப்படும். எனவேதான் ஆசிரியர்கள் 3 ஆண்டு பதவி உயர்வு துறப்பு என்று எழுதிக் கொடுத்தாலும் 4 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது. 17.8.15 அன்று நடைபெற்ற கலந்தாய்வில் 3 ஆண்டுகள் பதவி உயர்வு வேண்டாம் என்று எழுதிக் கொடுத்தவர்கள் 17.8.2018-க்குப் பின் வரும் தலைமை ஆசிரியர் பணியிடத்தில் நியமிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் மே மாதம் நடைபெறும் கலந்தாய்விலிருந்து இதை நடைமுறைப்படுத்தி மாநிலம் முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையைத் தொடக்கக் கல்வி இயக்குநர் நிறைவேற்ற வேண்டும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்க்கிறார்கள்" என்றார்.
2017 ஆசிரியர் தகுதித் தேர்வர்கள் கவனத்திற்கு...
ReplyDeleteதாள் -2 பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ், நோட்டிபிகேசன், பணிநியமனம் நடைபொறாததை..
தாள் 1க்கு சான்றிதழ் சரிபார்ப்பு தேர்ச்சி சான்றிதழ், நோட்டிபிகேசன், பணிநியமனம் நடைபொறாததை உடனடியாக வெளியிட வலியுறுத்தி வரும் ஏப்ரல் 23ம் தேதி திங்கள்கிழமை சென்னை டிஆர்பி - பள்ளிக்கல்வி அலுவலகம் செல்ல இருக்கிறோம்..
உங்களுடைய வருகையை உறுதிபடுத்துங்கள்.
புருசோத்தமன் விழுப்புரம் - 9976251870
சக்திவேல்நாமக்கல் - 98427 60167
ராஜலிங்கம் புளியங்குடி - 86789 13626..
போர்வை,,,, தலையணை,,, பாய் அனைத்தும் எடுத்து வர வேண்டும் என்று டக்லஸ் ராஜலிங்கம் குரூபில் சொல்லியிருக்கிறார்..... ஏன்டா அற மெண்டல்...... trb க்கு எதுக்குடா இதெல்லாம்...... போய் நிர்வாண போராட்டம் பண்றயாமே...... பண்ணு டக்லஸ்..... நேரடி ஒளிபரப்பு பண்ணவும
ReplyDelete2017 தேர்வர்களின் போராட்டங்களை கொச்சை படுத்தி பேசும் நீர் ஆசிரியர் தானா
Deleteபோராட்டம் பண்ணினாள் தானே.... காமெடி பண்ணும் போது ரசிக்க தான் செய்ய வேண்டும்.... டேய் கூஜா.... உன் போராட்டத்தை பற்றி அனைவருக்குமே தெரியும்....
ReplyDeleteமுதலில் ஆசிரியர் தேர்வில் தொடர்புடைய நபர்களை அழைத்து போராட்டம் செய்யுங்கள்.... கல்லூரி மாணவர்களை அழைத்து கொண்டு போய் பில்டப் குடுக்கும் நீங்களெல்லாம் போராட்டம் பற்றி பேச தகுதியில்லாத ஆட்கள்......
ReplyDeleteதொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை!
ReplyDeleteஅரசாங்கத்தின் உத்தரவு 3 ஆண்டுகள் பதவி உயர்வு துறப்பு என்று இருந்தாலும், 4 கல்வியாண்டுகள் கழித்து 5 ஆம் ஆண்டில்தான் பதவி உயர்வு வழங்கப்படுவது ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வரும் மே மாதம் நடைபெறும் கலந்தாய்விலிருந்து 3 கல்வியாண்டுகள் கழித்து 4 ஆம் ஆண்டில் பதவி உயர்வு வழங்கவும், இதை நடைமுறைப்படுத்தி மாநிலம் முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையைத் தொடக்கக் கல்வி இயக்குநர் நிறைவேற்ற வேண்டும் என்றும் ஆசிரியர்கள் எதிர்பார்க்கிறார்கள்".