ஆசிரியர் பணியில் சேர விரும்பும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வாய்ப்பு: தமிழ்நாடு மத்திய பல்கலை.யில் ஒருங்கிணைந்த பிஎஸ்சி., பிஎட் படிப்பு நுழைவுத் தேர்வுக்கு ஏப்.13-க்குள் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 30, 2019

ஆசிரியர் பணியில் சேர விரும்பும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வாய்ப்பு: தமிழ்நாடு மத்திய பல்கலை.யில் ஒருங்கிணைந்த பிஎஸ்சி., பிஎட் படிப்பு நுழைவுத் தேர்வுக்கு ஏப்.13-க்குள் விண்ணப்பிக்கலாம்


தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் ஒருங் கிணைந்த 4 ஆண்டு கால பிஎஸ்சி.பிஎட் படிப்புக்கான நுழைவுத்தேர்வு மே மாதம் நடைபெற உள்ளது. இதற்கு ஏப்ரல் 13-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் திருவாரூர் அருகே நீலக்குடியில் அமைந்துள்ளது. இங்கு,பிளஸ் 2 முடித்தவர்கள்நேரடியாக சேரும் வகையில் 5 ஆண்டுகால ஒருங்கிணைந்த எம்எஸ்சி (வேதியியல், கணிதம், வாழ்வியல், இயற்பியல்) மற்றும் எம்ஏ (பொருளாதாரம்) படிப்புகளும், கணிதத்தில் 5 ஆண்டு கால பிஎஸ்சி, பிஎட்படிப்பு உட்பட பல்வேறு படிப்புகளும் வழங்கப்படுகின்றன. ஒருங்கிணைந்த முதுகலை படிப்பில் தலா 30 பேரும், பிஎஸ்சி.பிஎட் படிப்பில் 5 பேரும் சேர்க்கப்படுகிறார்கள்.

4 ஆண்டுகளில்...

இங்கு வழங்கப்படும் படிப்புகளில் பிஎஸ்சி,.பிஎட். படிப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது. சாதாரணமாக பிஎஸ்சி கணிதம் முடித்துவிட்டு பிஎட் படித்தால் 5 ஆண்டுகள் ஆகும். ஆனால், இந்த ஒருங்கிணைந்த பிஎஸ்சி.பிஎட் படிப்பை 4 ஆண்டுகளில் முடித்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர் பணியில் சேர விரும்பும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இப்படிப்பு ஒரு வரப்பிரசாதமாக அமையும். 12-ம்வகுப்பில் கணிதம், இயற்பியல்,வேதியியல் பாடங்களை படித்தவர்கள் இந்த படிப்பில் சேரலாம். ஒருங்கிணைந்த படிப்புகள் உட்பட இப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் அனைத்து படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.மே 25, 26-ம் தேதிகளில்அந்த வகையில், தற்போது 2019-2020-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. நுழைவுத்தேர்வு மே 25 மற்றும் 26-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.தேர்வு முடிவுகள் ஜூன் 21-ம் தேதி அன்று வெளியிடப்படும். ஒருங்கிணைந்த எம்எஸ்சி மற்றும் எம்ஏ படிப்புகள், ஒருங்கிணைந்த பிஎஸ்சி.பிஎட் படிப்பு உள்ளிட்ட இதர படிப்புகளில் சேர விரும்புவோர் ஏப்ரல் 13-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.cucetexam.in) விண்ணப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு மத்தியபல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இப்பல்கலைக்கழகத்தில் வழங் கப்படும் பல்வேறு படிப்புகள் குறித்த விவரங்களை www.cutn.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

மேலும், மாணவர் சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு 04366 - 277337, 277261 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டும் விளக்கம் பெறலாம்.

1 comment:

  1. ஆசிரியர்களை சிறியர் ஆக்கி வேலைகளை சீரியஸ் ஆக்கி விட்டார்கள்.......அடுத்த தலைமுறையும் அவதிப்படும்.....பணம் இருக்கும் மக்கு பண்டாரங்கள்....பெயரளவில் படித்து.....அறிவாளி களை தோற்கடித்து அரசு வேலைகளில் முந்து செல்லலாம்......அது கூட அரசாங்கம் ஆள் எடுத்தால்.....எடுப்பார்கள் என்பது நிச்சயம் அல்ல.......டீமாஸ்டர் சம்பளம் 15000,கார் ஓட்டுநர் சம்பளம் 20000,பரோட்டா மாஸ்டர் சம்பளம் 18000....இந்த நிலையில் ஆசிரியர்கள் படித்துவிட்டு 10000சம்பளத்தில் குப்பை கொட்ட வேண்டுமா.......h ராஜா ஹைகோர்ட்டை சொன்ன வார்த்தை போட்டு கொள்ளுங்கள் .......

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி