பள்ளிக் கல்வித் துறையில், புதிதாக 1,152 முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களின் தேர்வுப் பட்டியலை, இம்மாத இறுதிக்குள் வெளியிட, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
கடந்த 2010-11ம் ஆண்டுக்கான, 1,152 முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மாநில பதிவு மூப்பு அடிப்படையில், தகுதியானவர்களின் விவரங்களை பெற்று, அவர்களுக்கு, கடந்த 7, 8, 9 தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு பணியை, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது.
இதற்கிடையே, பார்வையற்ற மற்றும் உடல் ஊனமுற்ற 198 பேரின் பட்டியல் விடுபட்டதாகக் கூறி, அவர்களின் பதிவு மூப்பு விவரங்களை, வேலை வாய்ப்பு இயக்குனரகம், ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பியுள்ளது. இவர்களுக்கு, 20, 21 ஆகியதேதிகளில், ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது.
இந்தப் பணிகள் முடிந்ததும், இன சுழற்சி வாரியாக, பதிவு மூப்பு தகுதி வாய்ந்தவர்களின் பெயர் பட்டியலை தொகுத்து, இம்மாத இறுதிக்குள் தேர்வுப்பட்டியலை வெளியிட, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. புதிய ஆசிரியர்கள், மார்ச் மாதத்தில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
Feb 22, 2012
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி