ஜாதி வாரி கணக்கெடுப்பு: அக்., 2ல் பட்டியல் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 18, 2012

ஜாதி வாரி கணக்கெடுப்பு: அக்., 2ல் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் நடந்த ஜாதி வாரி கணக்கெடுப்பு, முடிவுக்கு வந்துள்ளது. அக்., 2ம் தேதி, கிராம சபை ஒப்புதலுக்கு வைக்கப்படவுள்ளது.ஜாதி வாரி கணக்கெடுப்பு பணி, மே 24ம் தேதி துவங்கியது. அரசு ஊழியர்களுடன், பெல் நிறுவனத்தின் பணியாளர்களும் இணைந்து,"டேப் லெட்' கம்ப்யூட்டர் உதவியுடன் இப்பணியை நடத்தினர்; சில இடங்களில், கம்ப்யூட்டர்களை இயக்க, மாணவர்கள் பயன்படுத்தப்பட்டனர். இப்பணி, மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை ஆதாரமாகக் கொண்டு நடந்தது.எடுக்கப்பட்ட தகவல்கள், தினமும், "ஆன்-லைன்' மூலம் பதிவு செய்யப்பட்டன. இவ்விவரங்கள் முழுமையாக இல்லாததால், பட்டியலை இறுதிசெய்வதில் தாமதம் ஏற்பட்டது. ஆய்வு குறித்த விவரங்கள் சரிதானா என, மேற்பார்வையாளர்களால், வீடுகளுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்யப்பட்டது. இதனால், திட்டமிட்டபடி 40 நாட்களில் முடிக்க வேண்டிய பணி, தற்போது முடிவுக்கு வந்துள்ளது.கணக்கெடுப்பு குறித்து ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்க பொது மக்களுக்கு,இம்மாத இறுதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. அதன் பின், தயாரிக்கப்படும் இறுதி பட்டியல், அக்., 2ம் தேதி, கிராம சபை கூட்டத்தில், மக்களின் அங்கீகாரத்திற்காக வைக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி