ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று பிற்பகலில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த ஜூலை மாதம் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதனை 6.8 லட்சம் பேர் எழுதினார்கள். ஆனால், 2,488 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்ததை அடுத்து,மீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.இதனை எதிர்த்து ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதிய யாமினி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக இன்று ஆசிரியர் தகுதித் தேர்வு வாரிய தலைவரை நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி