தனியார் கல்லூரி நிர்வாகத்தை அரசே ஏற்கும், கல்வித்துறையின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது" என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டது.மதுரை யாதவா கல்வி நிதி சங்க செயலாளர் நவநீதகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு: மதுரை யாதவா கல்லூரி செயலாளராக என்னை நியமித்தனர். அதற்கு, கல்லூரிக்கல்வி இணை இயக்குனர் 2009ல், ஒப்புதல் அளித்தார். இதை எதிர்த்து, கோபாலகிருஷ்ணன் மற்றும் சிலர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. யாதவா கல்வி நிதி சங்கம் குறித்து, கண்ணன் என்பவர் பதிவுத்துறை ஐ.ஜி.,க்கு புகார் அளித்தார். ஐ.ஜி., அறிக்கை கோரினார். என்னை விசாரணைக்கு அழைத்தார். கல்லூரி நிர்வாகத்தில் பிரச்னை ஏற்படும் பட்சத்தில், அதை கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் நிர்வகிக்கலாம், என 1985 செப்.,2 ல் (ஜி.ஓ.,-எம்.எஸ்., 1021) கல்லூரி கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, மதுரை கல்லூரிக்கல்வி இணை இயக்குனர், எங்கள் கல்லூரி நிர்வாகத்தை ஏற்பதாக, பிப்.,28 ல் உத்தரவிட்டார். இது தனியார் கல்லூரி ஒழுங்குமுறைச் சட்டப்படி செல்லாது. செயலாளர் இல்லை எனில், கல்லூரி குழுதான் நிர்வகிக்க வேண்டும். கல்வித்துறையின் (1985) உத்தரவைரத்து செய்ய உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.நீதிபதி வினோத் கே.சர்மா முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் ஈ.வி.என்.சிவா ஆஜரானார். தமிழ்நாடு தனியார் கல்லூரி விதிகள்படி, ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கும் அதிகாரம் கல்லூரி செயலாளருக்கு உண்டு. இதை யாராலும் மாற்ற முடியாது. கல்வித்துறையின் (1985) மற்றும்தற்போது கல்லூரி கல்வி இணை இயக்குனரின் உத்தரவு எதேச்சதிகாரமானது. நிர்வாக விதிகளுக்கு புறம்பானது.நிர்வாகத்தில் தகராறு ஏற்படும் பட்சத்தில், மண்டல இணைஇயக்குனர் நிர்வாக பொறுப்பை ஏற்கலாம். பிரச்னை முடிவுக்கு வந்தபின், பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும். கல்லூரி கல்வித்துறையின் (1985) உத்தரவுரத்து செய்யப்படுகிறது, என உத்தரவிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி