ஆசிரியர் தகுதி மறுதேர்வு முடிவுகள் வரும் நவம்பர் இறுதியில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.அதற்கடுத்த ஒரு மாதத்தில் புதிய தேர்வு முறையின் அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டு டிசம்பரில் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.இந்தப் புதிய முறையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வழக்கத்தைவிட கூடுதலாக நேரம் ஆகும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.6 லட்சம் பேர்: தமிழகம் முழுவதும் 1,094 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தத் தேர்வை 6 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர். எந்தவொரு பிரச்னையும் இன்றி இந்தத் தேர்வு மிகவும் அமைதியாக நடந்து முடிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்தத் தேர்வின் அடிப்படையில் 22 ஆயிரத்துக்கும் அதிகமான பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூலை 12-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து, தேர்ச்சிபெறாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிப்பதற்காக ஆசிரியர் தகுதி மறுதேர்வு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.காலையில் நடைபெற்ற முதல் தாளை 2லட்சத்து 74 ஆயிரம் பேர் எழுதினர். பிற்பகலில் நடைபெற்ற இரண்டாம் தாளை 3 லட்சத்து 73 ஆயிரம் பேர் எழுதினர். சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இரண்டு தாள்களையும் எழுதினர்.தேர்வு நேரம் அதிகரிக்கப்பட்டது குறித்து பெரும்பாலான தேர்வர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். முதல் தாளில் ஆங்கிலமும், இரண்டாம் தாளில் தமிழும் சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்கள் புகார் தெரிவித்தனர்.3 வாரங்களுக்குப் பிறகு விடைகள் வெளியீடு: தமிழகம் முழுவதிலுமிருந்து சென்னைக்குஇந்த விடைத் தாள்கள் அனைத்தும் கொண்டுவரப்படும். அதன் பிறகு மூன்று வாரங்கள் இந்த விடைத் தாள்கள் ஸ்கேன் செய்யும் பணி நடைபெறும்.விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்ட பிறகு, கேள்விகளுக்கு உரிய சரியான விடைகள் இணையதளத்தில் வெளியிடப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி