அனைத்துப் பள்ளிகளிலும் குடிநீர், கழிவறை வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.லாப நோக்கற்ற சுற்றுச்சூழல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்தியாவில்உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் அனைத்து அடிப்படை வசதிகளையும் அடுத்த 6 மாத காலத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.6 மாதங்களில் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாத பட்சத்தில், அது குறித்து மனுதாரர் மேல்முறையீடு செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி