பதவி உயர்வு பட்டியல் தொடர்பாக புதிய உத்தரவு வெளியிடப்பட்டுள்ளதால் தமிழாசிரியர்கள் "குஷி' அடைந்துள்ளனர்.தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார் நிலைப் பணி 1.1.2013 நிலவரப்படி அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் (தமிழ் ஆசிரியர் உட்பட) மற்றும் சிறுபான்மை பாட/மொழி ஆசிரியர்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பபடுகின்றனர். இதற்கு தகுதி வாந்த இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்களுக்கு முன்னுரிமை பட்டியல் தயார் செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.இதன்படி தமிழாசிரியர் பதவி உயர்வுக்கு 31.12.1998 வரையிலும், இதர பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு கடந்த டிசம்பர் மாதம் 31ம் தேதி வரையிலும் முன்னுரிமை பட்டியல் தயார் செய்ய உத்தரவிடப்பட்டது.ஆனால் இந்த உத்தரவுக்கு தமிழக இடைநிலை மற்றும் பதவி உயர்வு பட்டதாரி ஆசிரியர் மன்றம் எதிர்ப்பு தெரிவித்து தகுதி வாய்ந்த தமிழாசிரியர்கள் அனைவரையும் பதவி உயர்வு பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குனர் மற்றும் இணை இயக்குனர் ஆகியோரிடம் வலியுறுத்தியது.இக்கோரிக்கை ஏற்று கொள்ளப்பட்டு தற்போது பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்த இடைநிலை ஆசிரியர் பட்டியல் தயார் செய்யும் போது தமிழாசிரியர் பதவி உர்வுக்கு 31.12.98 வரை என்பதை மாற்றி கடந்த டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை தகுதி வாய்ந்த தமிழாசிரியர்கள் அனைவரையும் பதவி உயர்வு பட்டியலில் சேர்த்து முன்னுரிமை பட்டியல் தயார் செய்ய புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்ட பள்ளிக் கல்வி இயக்குனர், இணை இயக்குனர் மற்றும் அதிகாரிகளுக்கு தமிழக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் மன்ற மாவட்ட நிர்வாகிகள் டேவிட் மார்ட்டின், பத்மனாபன், காளிராஜ், ஜான்சன், கணேசன், ஜெயந்தி ஆகியோர் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.
Jan 10, 2013
பதவி உயர்வு பட்டியலில் புதிய திருத்தம் தமிழக தமிழாசிரியர்கள் "குஷி'
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி