குரூப்-2 தேறியவர்களுக்கான நேர்முகத்தேர்வு தொடக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 23, 2013

குரூப்-2 தேறியவர்களுக்கான நேர்முகத்தேர்வு தொடக்கம்.

குரூப்-2 நேர்முகத் தேர்வு, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், துவங்கியது. நகராட்சி கமிஷனர், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர், சார்பதிவாளர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள, 3,631 பணியிடங்களை நிரப்ப, கடந்த நவ., மாதம் குரூப்-2 தேர்வு நடந்தது.இதன் முடிவுகள், சமீபத்தில் வெளியிடப்பட்டன. மொத்த இடங்களில்,1,426 இடங்கள், நேர்முகத் தேர்வை உள்ளடக்கிய தேர்வாகும்.மீதமுள்ள பணியிடங்கள், நேர்முகத்தேர்வு அல்லாத பணியிடங்கள். முதல்கட்டமாக, 1,426 பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வு, நேற்று தேர்வாணையத்தில் துவங்கியது.இதற்கு, 2,852 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். ஒரு நாளைக்கு, 450 பேர் வீதம், மார்ச், 1 வரை, தொடர்ந்து நேர்முகத் தேர்வு நடக்கிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி