நிரம்பாமல் உள்ள, 46 வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்புவதற்காக,ஆறாம் கட்ட கலந்தாய்வு, ஜூலை, 9ம் தேதி நடக்கிறது.டி.என்.பி.எஸ்.சி., விடுத்துள்ள அறிவிப்பு: வி.ஏ.ஓ., தேர்வு, கடந்த ஆண்டு, செப்டம்பர், 30ல் நடந்தது. இதுவரை நடந்த, ஐந்து கட்ட கலந்தாய்வு மூலம், 1,824 பேர், வி.ஏ.ஓ.,க்களாக, பணி நியமனம் செய்யப்பட்டனர். இன்னும், 46 பணியிடங்கள், காலியாக உள்ளன. இதை நிரப்ப, ஆறாம் கட்ட கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு, ஜூலை, 9ம் தேதி, தேர்வாணைய அலுவலகத்தில் நடக்கிறது.இதில் பங்கேற்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர் பெயர்கள், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. விண்ணப்பதாரர், கலந்தாய்வுக்கு வரும்போது, அசல் சான்றிதழ் மற்றும் சான்றொப்பம் இட்ட பிரதி ஆகியவற்றை, கொண்டு வர வேண்டும். இவ்வாறு, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி