வந்தவாசி தாலுகாவை சேர்ந்த மாற்று திறனாளி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:அரசு மருத்துவ கல்லூரியில் மாற்று திறனாளி ஒதுக்கீட்டில் 131பேர் விண்ணப்பித்தனர். இதில் 81 பேரை கலந்தாய்வுக்கு அழைத்து விட்டு 45 பேரை மட்டும் சேர்த்துவிட்டனர். மீதம் உள்ள 9 இடங்களை பொதுப்பிரிவுக்கு ஒதுக்கீடு செய்துவிட்டனர்.இந்த ஒதுக்கீட்டில் முறைகேடு நடக்கிறது. எனக்கு மாற்று திறனாளி ஒதுக்கீட்டின் கீழ் இடம் தர உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார்.இதை நீதிபதி கே.கே.சசிதரன் விசாரித்தார். அப்போது அரசு தரப்பில்சிறப்பு வக்கீல் கிருஷ்ணகுமார் ஆஜராகி ஆவணங்களை தாக்கல் செய்தார். வாதங்களை கேட்ட நீதிபதி, ‘இந்த வழக்கு முடியும் வரை மாற்று திறனாளிகளுக்கான3 இடத்தை நிரப்பாமல் ஒதுக்கி வைக்க அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைத்தார். 2ம் கட்ட மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு முன்பே இந்த 3 இடம் ஒதுக்கி வைக்க வேண்டும். வழக்கில் தீர விசாரித்த பிறகு இந்த இடம் நிரப்பப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி