ஒரு பக்கம், டேப்ளட், ஸ்மார்ட்ஸ் ஸ்கிரீன் என்று சில பள்ளிகள் செயல்பட, இன்னும் இந்தியாவில் நான்கில் ஒரு பங்கு பள்ளிகள், கரும்பலகை கூட இல்லாமல் செயல்படுகின்றன."சைல்டு ரிலிப் அண்டு யு" என்ற அரசு சாரா அமைப்பு, "லேர்னிங் பிளாக்ஸ்" என்ற தலைப்பில் ஆய்வு செய்து, இன்னும் இந்தியாவில் உள்ள ஆரம்ப, உயர்நிலைப் பள்ளிகளில், அடிப்படை வசதிகள் சரிவர நிறைவேற்றப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உள்பட, 13 மாநிலங்களில் செயல்படும் 750 பள்ளிகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 75 சதவீத பள்ளிகளில் டேபிள், சேர், பெஞ்ச் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. 41 சதவீத பள்ளிகளில் உள்ள மாணவர்கள்,பள்ளி கட்டடங்கள் இல்லாமல் திறந்தவெளியில் படிக்கின்றனர். 11 சதவீத பள்ளிகளில், டாய்லெட் வசதி இல்லை. 34 சதவீத பள்ளிகளில் டாய்லெட்கள் இருந்தும் பயன்படுத்த முடியாமல் உள்ளன.இரண்டில் ஒரு பங்கு பள்ளிகளில் டாய்லெட் அருகே தண்ணீர் இல்லை. வட மாநிலங்களில் உள்ள 70 சதவீத பள்ளிகளில், டாய்லெட் அருகே தண்ணீர் வசதி இல்லை. பாதிக்கும் மேற்பட்ட பள்ளிகளில், டாய்லெட் பயன்படுத்திய பிறகு கையை சுத்தம் செய்ய சோப்புகள் இல்லை என்று இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.மேலும் 80 சதவீத பள்ளிகளில், டாய்லெட் சுத்தம் செய்ய ஊழியர்கள் இல்லை. இதனால் மாணவர்கள் சுத்தம் செய்ய வற்புறுத்தப்படுகின்றனர். 44 சதவீத பள்ளிகளில் மின்வசதி இல்லை. குறிப்பாக கிழக்கு பகுதியில் உள்ள 74 சதவீத பள்ளிகளில்மின்வசதி இல்லை. இந்தியாவில் உள்ள பள்ளிகளின் தற்போதைய நிலை குறித்த இந்த ஆய்வு, அதிர்ச்சி அடைய வைக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி