குரூப்-1 மெயின் தேர்வு விடைத்தாள்கள் 2 முறை மதிப்பீடு செய்யப்படும் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நவநீதகிருஷ்ணன் பேட்டி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 28, 2013

குரூப்-1 மெயின் தேர்வு விடைத்தாள்கள் 2 முறை மதிப்பீடு செய்யப்படும் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நவநீதகிருஷ்ணன் பேட்டி.

அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1மெயின் தேர்வு விடைத்தாள்கள்2முறை மதிப்பீடு செய்யப்படும் என்றுடி.என்.பி.எஸ்.சி. தலைவர் நவநீதகிருஷ்ணன் கூறினார்.

குரூப்-1தேர்வு

தமிழ்நாட்டில் பல்வேறு
துறைகளில் காலியாக உள்ள துணை கலெக்டர் உள்ளிட்ட25பணியிடங்களில் பட்டதாரிகளை பணி அமர்த்துவதற்காக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப்1முதல் நிலை தேர்வை கடந்த பிப்ரவரி மாதம்16-ந்தேதி நடத்தியது. இந்த தேர்வை75ஆயிரத்து627பேர் எழுதினார்கள். அவர்களில்1,372பேரை அரசுப்பணியாளர் தேர்வாணையம் தேர்ந்து எடுத்தது. தேர்ச்சி பெற்ற1,372பேருக்கு மெயின் தேர்வு கடந்த25-ந்தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது.தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும்தான் இந்த தேர்வு14மையங்களில் நடந்தது. இந்த தேர்வுகள் அனைத்தும் பொதுஅறிவை சோதிக்கும் வகையில் இருந்தன. அவை அனைத்தும் கட்டுரைகளாக பதில் அளிக்க வேண்டியிருந்தது. இந்த தேர்வை84சதவீதம் பேர் மட்டுமே எழுதினார்கள். தேர்வு மையங்கள் மற்றும் தேர்வு எழுதியது அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.இந்த தேர்வு விடைத்தாள்கள் எப்படி மதிப்பீடு செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணனிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-2முறை மதிப்பீடு செய்யப்படும்தேர்வு விடைத்தாள்கள் மிக பாதுகாப்பாக வைக்கப்படும். நிபுணத்துவம் வாய்ந்தவர்களை அழைத்து அவர்கள் மூலம் இந்த விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும். இந்த மதிப்பீடு ஒரு முறை மட்டுமல்லாமல்2முறை மதிப்பீடு செய்யப்படும். குரூப்-1மெயின் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் நேர்முகதேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். பின்னர் அவர்கள் குரூப்-1அதிகாரிகள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.இவ்வாறு தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி