கோவையில் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 29, 2013

கோவையில் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்.


கோயம்புத்தூரில் அடுத்த மாதம்6ம் தேதியில் இருந்து 14ம் தேதி வரை ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.கோயம்புத்தூர் நேரு ஸ்டேடியத்தில்
முகாம் நடைபெறும். இம்முகாமில் கோயம்புத்தூர், மதுரை, தேனி, ஈரோடு, தர்மபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, நாமக்கல்,திண்டுக்கல், திருப்பூர், சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த, இளைஞர்கள் கலந்து கொள்ளலாம்.சிப்பாய் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வுக்கு வருவோர் 10ம் வகுப்பு அல்லது பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், டி.சி., ஆகியவற்றின் நகல், தாசில்தாரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிட சான்றிதழ், பள்ளி அல்லது கல்லூரி முதல்வரிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தை சான்றிதழ், பாஸ்போர்ட் மற்றும் தபால் தலை அளவு புகைப்படங்கள் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். புகைப்படத்தின் கீழ், பெயர் மற்றும் பிறந்த தேதி, அச்சிடப்பட்டிருக்கவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 0422-2222022 தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி