தமிழகத்தில் தீபாவளி பண்டிகை ஆசிரியர் குறை தீர்க்கும் முகாம் மாற்றம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 30, 2013

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை ஆசிரியர் குறை தீர்க்கும் முகாம் மாற்றம்.


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆசிரியர் குறை தீர்க்கும் நாள் சிறப்பு முகாம்கள் மாற்றப்பட்டுள்ளது.இதுகுறித்து அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமையன்று ஏ.இ.ஓ அலுவலகங்களிலும், 2வது சனிக்கிழமை டி.இ.இ.ஓ அலுவலகங்களில் ஆசிரியர்கள் பணி மற்றும் பணப் பலன்கள் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.ஒவ்வாரு மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமையன்று தொடக்க கல்வி இயக்ககத்தில் நடக்கும் குறை தீர்க்கும் முகாமில் மாவட்டதொடகக கல்வி அலுவலரிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.எனினும், வரும் 1ம் தேதி முதல் சனிக்கிழமை அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் ஆசிரியர்கள் பணி மற்றும் பணப் பலன்கள் சார்ந்த குறை தீர்க்கும் முகாம் நாளன்று சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் முறையே இரண்டு, மூன்று மற்றும் 4வது சனிக் கிழமைகளில் நடத்தப்பட வேண்டும்.இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி