கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற டி.என். பி.எஸ்.சி குரூப்-2 தேர்வின் வினாத்தாள் ஈரோடு, தர்மபுரி, திருவண்ணாமலை பகுதிகளில் முன்கூட்டியே வெளியானது. இதையடுத்து
குரூப் 2 தேர்வை தமிழ்நாடு தேர்வாணையக்குழு ரத்து செய்தது. இவ்வழக்கில் தொடர்புடைய பவானியை சேர்ந்தசெந்தில்குமார், அவரது மனைவி தனபாக்கியம் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரித்தனர்.
இதில் நாமக்கல், குமாரபாளையத்தை சேர்ந்த பேராசிரியர் சுதாகர், பிரவுசிங்சென்டர் நடத்தி வந்த நாமக்கல்லை சேர்ந்த செல்வராஜ், சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த ஸ்ரீதர்ராஜ், திருவண்ணா மலையில் வசித்த ஸ்ரீதர்ராஜின் தம்பி செந்தில்குமார், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஆனந்தராவ் ஆகியோரை ஈரோடு டவுன் போலீசார் கைது செய்தனர். பின்னர், இவ்வழக்கு சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது. இதில், நாகை மாவட்டத்தில் வணிகவரித்துறை துணை கமிஷனராக பணியாற்றி வந்த ரவிக்குமார், இவரது சகோதரர் சுப்பிரமணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் 32 வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த சென்னை வணிக வரித்துறை துணை கமிஷனராக பணியாற்றி வந்த ஞானசேகரன்(31) என்பவரை கோவை சிபிசிஐடி போலீசார் சென்னையில் நேற்று முன்தினம் கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய 42 பேரும் கைது செய்யப்பட்டுவிட்டதால், விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி