நாட்டில் உள்ள, 34 ஆயிரத்திற்கும் அதிகமான வங்கிகள், இன்னும், 150தினங்களில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அமெரிக்காவின், மைக்ரோசாப்ட்கம்ப்யூட்டர் நிறுவனத்தின், அலுவலக பயன்பாட்டு மென்பொருளான, 'விண்டோஸ் எக்ஸ்பி'யை, நம் நாட்டின், 34 ஆயிரம் வங்கிகளும்
பயன்படுத்தி வருகின்றன. அடுத்த ஆண்டு, ஏப்ரல், 8ம் தேதி முதல், 'விண்டோஸ் எக்ஸ்பி'யை, மைக்ரோசாப்ட் கைவிட உள்ளது. அதற்குப் பதிலாக, 'விண்டோஸ் 8.1' என்ற மென்பொருளை அறிமுகப்படுத்துகிறது.நம் நாட்டில், 40 - 70 சதவீத வங்கிப் பணிகள், விண்டோஸ் எக்ஸ்பி மென்பொருள் மூலம் தான் நடக்கிறது. இந்த மென்பொருள் நிறுத்தப்பட்டால், வங்கிப் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.மைக்ரோசாப்ட் நிறுவனத்தின்இந்த முடிவால், இந்திய வங்கிகளுக்கு, 3,300 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என, கூறப்படுகிறது.விண்டோஸ் எக்ஸ்பிக்குப் பதிலாக, 'விண்டோஸ் 8.1' என்ற, புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்தும் படி, அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.இந்த ஆப்ரேட்டிங் சிஸ்டம், வைரஸ் தாக்குதலில் இருந்து, எக்ஸ்பியை விட, ஆறு மடங்கு அதிகமாக தாக்கு பிடிக்கும் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி