இது மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடுவதற்கான மற்றொரு முயற்சியாகும். தமிழ்நாட்டில் மாதிரிப் பள்ளிகளை தனியாருடனான
கூட்டு இல்லாமல், மாநில அரசே நேரடியாக கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் தொடங்கியுள்ளது.இந்த நிலையில் கல்வியில் பின்தங்கிய பகுதிகள் அல்லாத இடங்களில் மாதிரிப் பள்ளிகளை தொடங்க விண்ணப்பம் செய்யுமாறு தனியாரைக் கோரும் அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டு, அதன் மீது முடிவெடுக்கப் போவதாகத் தெரிகிறது. இதில் மாநில அரசு முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் ஒப்புதலோ, ஆலோசனையோ இல்லாமல் மத்திய அரசே நேரடியாக பி.பி.பி. என்ற பெயரில் கல்வியில் தனியார் மயத்தை அனுமதிப்பது தவறான முன்மாதிரியாகிவிடும். இந்தப் பிரச்சினையில் தனியாருக்கு பள்ளி நடத்த இடம் ஏற்பாடு செய்து கொடுக்கும் பணியை மாத்திரம் மாநில அரசுகள் கவனிக்கலாமாம். மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடுகின்ற இப்படிப்பட்ட போக்கினை மாநில அரசு அனுமதிக்கவே கூடாது. இதற்கு தமிழக அரசுஉடனடியாக தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி