சிறப்பு இளைஞர் காவல் படைக்கு தேர்வானவர்களுக்கு பிப்.,12ல் நியமன ஆணை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 5, 2014

சிறப்பு இளைஞர் காவல் படைக்கு தேர்வானவர்களுக்கு பிப்.,12ல் நியமன ஆணை.


தமிழ்நாடு சிறப்பு இளைஞர் காவல் படைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான, பணி நியமன ஆணையை பிப்., 12ல் முதல்வர் ஜெ., வழங்குகிறார். அன்றைய தினமே,
அந்தந்த மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் 4 வார கால பயிற்சி துவங்குகிறது.

தமிழ்நாடு சிறப்பு இளைஞர் காவல் படைக்கு, 7,500 ரூபாய் சம்பளத்தில் 10,500 பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாக, முதல்வர் ஜெ., அறிவித்தார். இதற்காக விண்ணப்பித்தவர்களுக்கு, நவ., 10 ல் எழுத்து தேர்வு நடந்தது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, டிச., 30 ல் உடற்தகுதி மற்றும் சான்றிதழ் சரிபார்க்கும் பணி, மருத்துவ பரிசோதனை நடந்தது.தேர்வு செய்யப்பட்டர்களுக்கான, பணி நியமன ஆணை, தபால் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இவர்களில் 2 மாவட்டத்திற்கு ஒருவரை தேர்வு செய்து அவர்களுக்கான பணி நியமன ஆணையை, சென்னை தலைமை செயலகத்தில் பிப்., 12 ல்,முதல்வர் ஜெ., வழங்க உள்ளார்.

அன்றைய தினமே, தேர்வான அனைவருக்கும், அந்தந்த மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் 4 வார கால பயிற்சி துவங்க உள்ளது. ரெகுலர் போலீசாருக்கு வழங்கப்பட்ட பயிற்சியை போல், இவர்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி