பிப்ரவரி 13.ல் தமிழக பட்ஜெட் தாக்கல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 6, 2014

பிப்ரவரி 13.ல் தமிழக பட்ஜெட் தாக்கல்.


பிப்ரவரி 13-ஆம் தேதி தமிழக சட்டமன்றம் கூடுகிறது. அன்று காலை 10 மணிக்கு 2014-15 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை தாக்கல் செய்யப்படும் என சட்டமன்றச் செயலாளர் ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டிற்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த 30-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 3-ஆம் தேதி வரை நடைபெற்றது. ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது.

இந்த கூட்டத்தொடர் குறுகிய காலம் மட்டுமே நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தொடரை தேமுதிக-வினர் புறக்கணித்தனர்.ஆளுநர் உரையின் மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது, அதிமுக எம்.எல்.ஏ.மார்க்கண்டேயன், திமுக தலைவர் கருணாநிதி பற்றி விமர்சித்ததற்கு கண்டனம் தெரிவித்த திமுகவினர் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.அதன் பின்னர் கருணாநிதி பற்றி அதிமுக உறுப்பினர் இழிவாக பேசியதையும் எம்.எல்.ஏ.சிவசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதையும் கண்டித்து, பேரவை கூட்டத் தொடரை திமுக புறக்கணிக்கிறது என மு.க.ஸ்டாலின் கூறினார்.ஆளுநர் உரை, முதல்வர் பதிலுரை, வெளிநடப்பு, புறக்கணிப்பு என கூட்டத்தொடர் 3-ஆம் தேதி நிறைவு பெற்றது. அன்றைய தினம் அவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், 2014-15 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை தாக்கல் செய்வதற்காக வரும் 13-ஆம் தேதி சட்டமன்றம் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. sc ku yen vaipu thara matriga entha tamil nadu la iruga pitikala cha.......... sc cutoff kodutha nan pass airupen yen TET 1 mark 81 nan yenna pantrathu solluga entha ammaku avalau pitivatham sc mela ethu nayama???????????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி