புதிய வடிவமைப்பில் பிளஸ் 2 விடைத்தாள் அச்சடிப்பு பணி தீவிரம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 9, 2014

புதிய வடிவமைப்பில் பிளஸ் 2 விடைத்தாள் அச்சடிப்பு பணி தீவிரம்.


பிளஸ்2தேர்வு மார்ச்3ம் தேதி தொடங்க உள்ளது. இந்த ஆண்டு சுமார்8லட்சம் மாணவ மாணவியர் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்களின்
சிரமங்களை குறைக்கும் வகையில் புதிய வடிவமைப்பில் விடைத்தாள் அச்சிடப்படுகிறது.

ஒவ்வொரு பாடத்துக்கும் தனித் தனியாக விடைத்தாள்அச்சிடப்படுகிறது. இந்த விடைத்தாளில் முகப்புத் தாள் 3பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேல் பகுதியில் மாணவர்கள் பெயர்,பதிவு எண்,தேர்வு எழுத வேண்டிய பாடம்,பள்ளி,தேர்வு நடக்கும் தேதி ஆகியவை அச்சிட்டே வழங்கப்படும்.மாணவர்கள் எதுவும் நிரப்பத் தேவையில்லை. மேலும்,மாணவர்களுக்கான பகுதியில்3கட்டங்கள் இடம் பெறுகிறது. அதில் தேர்வு எழுத வந்தாரா,இல்லையா,முறைகேடு செய்தாரா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதை தேர்வு அறை மேற்பார்வையாளர் பூர்த்தி செய்வார். இது தவிர தலைமை கண்காணிப்பாளர்,அறை மேற்பார்வையாளர் ஆகியோர் கையெழுத்திட வேண்டும். அடுத்த இடத்தில் மாணவர் கையொப்பம் மட்டும் போட வேண்டும்.

மேலும்,மாணவரின் போட்டோ அதில்இடம் பெற்று இருக்கும். அடுத்துள்ள கீழ் பகுதியில் விடைத்தாள் திருத்திய பிறகு மதிப்பெண் போட்டது குறித்து குறிப்பிட வேண்டிய கட்டங்கள் இடம் பெறுகின்றன.விடைத்தாளின் முகப்பில் அச்சிடப்பட்டுள்ள மேல்பகுதி,கீழ்ப்பகுதி ஆகியவைதேர்வுத் துறையால் கிழிக்கப்பட்டு,பின்னர் டம்மி எண்கள் போட்டு விடைத் தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்புவார்கள். இதன் மூலம் விடைத்தாளில்எந்த குழப்பமும் வராது. மாணவர்களும் நினைவு மறதியாக எதை மாற்றி எழுதிவிட முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக இந்த விடைத்தாளில் முகப்பில்3இடங்களிலும் ரகசிய குறியீடுகள் இடம் பெறுகின்றன.

4 comments:

  1. new technology follow pannuranga. very good to edu dept

    ReplyDelete
  2. There should not be any kind of disturbances following in this method.

    ReplyDelete
  3. There should not be any kind of disturbances following in this method.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி