25ம் தேதி இல்லாத வெயில், 26ம் தேதி வருமா? : தேர்வு நேரம் மாற்றத்தில் ஆசிரியர்கள் கேள்வி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 3, 2014

25ம் தேதி இல்லாத வெயில், 26ம் தேதி வருமா? : தேர்வு நேரம் மாற்றத்தில் ஆசிரியர்கள் கேள்வி.


பத்தாம் வகுப்பு பொது தேர்வு நேரத்தை, வழக்கம் போல், காலை, 10:00 மணிக்குமாற்றக் கோரி, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம், மாநிலம்முழுவதும்,
5ம் தேதி, ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. பிளஸ் 2 தேர்வு, வழக்கம்போல், காலை, 10:15 மணிக்கு துவங்குகிறது.ஆனால், 10ம் வகுப்பு தேர் வு மட்டும், ஒரு மணி நேரம் முன்னதாக, காலை, 9:15க்கு துவங்குகிறது.

மன உளைச்சல்:

மார்ச், 26ம் தேதி முதல் ஏப்ரல், 9 வரை, 10ம் வகுப்பு தேர்வு நடக்கிறது. இந்த நேரத்தில், வெயில் இருக்கும் என்பதால், சிறுவயது மாணவர்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காக, முன்கூட்டியே, தேர்வு துவங்க, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், கிராமப்புற மாணவர்களுக்கு, இது, பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என, ஆசிரியர்கள் கூறுகின்றனர். "காலையில், கடைசியாக ஒருமுறை, பாடப் பகுதிகளை திருப்பி பார்க்க கூட நேரம் இருக்காது. எழுந்த உடன், பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். மேலும், பல பள்ளிகள், தொலைவாக உள்ளன. பஸ் பிடித்து தான், பள்ளிக்கு செல்ல வேண்டும். இதனால்,மன உளைச்சல் ஏற்படும்' என, ஆசிரியர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க பொதுச் செயலர், சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது: மார்ச், 25ல் பிளஸ் 2 தேர்வு நடக்கிறது. 10ம் வகுப்பு தேர்வு துவங்கும், மறுநாள், 26ல், கடும் வெயில் வந்து விடுகிறதா? ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இருந்து, காலை, 10:00 மணிக்குத் தான், தேர்வு துவங்குகிறது.

ஆர்ப்பாட்டம் :

இப்போது, திடீரென, நேரத்தை மாற்றிவிட்டனர். இதனால், கிராமப்புற மாணவர்களுக்கு, கண்டிப்பாக பாதிப்பு ஏற்படும். நேரத்தை மாற்றியது, முதல்வர் என்பதால், தங்களால் எதுவும் செய்ய முடியாது என, அதிகாரிகள் கூறுகின்றனர். நேரத்தை மாற்ற வலியுறுத்தி, 5ம் தேதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், மாலை, 5:30 மணிக்கு, ஆர்ப்பாட்டம் நடக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி