SSTA சார்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சென்ற ஆண்டே தொடுக்கப்பட்ட வழக்கினை யாவரும் அறிவீர்கள்.அந்த வழக்கினை விசாரணைக்கு மீண்டும் கொண்டு வருவதில் சரியான நீதிமன்ற நடைமுறைப்படி முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்திலும் தன் கணக்கினை கனகச்சிதமாக, உண்மையை மூலதனமாக, மேலும் உச்சநீதிமன்ற அனுபவத்தை கொண்டு வெள்ளிக்கிழமை கோர்ட் எண்:11இல் வரிசை எண்: 80 ஆக நீதியரசர்.திரு. சுப்பையா அவர்களிடம் விசாரணைக்கு வந்தது. மரியாதைக்குரிய அரசு வழக்கறிஞர் திரு.விஜயகுமார் அவர்கள் ஆஜரானார்கள். நம்முடைய சார்பில் மூத்த மற்றும் பல கல்வித்துறை சமந்தமான வழக்குகளில் சாதகமான தீர்ப்பினை மனுதாரருக்கு பெற்றுத்தந்த வழக்கறிஞர் திரு.செல்வராஜ் அவர்கள் ஆஜராகி வாதாடினார். நீதியரசர் அரசின் நிலைப்பாடு என்ன? எனக் கேட்டபோது, இன்னும் இரண்டு வாரத்தில் அரசினை கலந்து பதில் மனு தாக்கல் செய்கிறோம் என சொல்லியதை ஏற்றுக்கொண்ட நீதியரசர் அவர்கள் , இரண்டு வாரம் வழக்கினை ஒத்திவைத்தார்.
ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் ஆசிரியர் நலனுக்காக பாடுபடும் சங்கம் , ஏற்கனவே ஆளும் கட்சியாக இருந்தவர்களுக்கு ஆதரவாக செயல்படும் சங்கம் இப்படி பல கட்சிகளின் தலைமைக்கு நெருக்கமாக செயல்படும் சங்கங்கள் இருந்தும் நீதிமன்றத்திற்கு சென்றுதான் தங்களின் உரிமைகளை பெற வேண்டிய அவல நிலை இந்த திருநாட்டில் மட்டுமே அரங்கேறும்.
ReplyDeleteவெற்றி நமக்கே.நன்றி டாடா சங்கத்திற்கு
ReplyDelete