தொடக்கக்கல்வித்துறையில் முதலில் 1.1.2013ன் படி பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த இயக்குனரிடம் திரு.செ.முத்துசாமி வலியுறுத்தல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 1, 2014

தொடக்கக்கல்வித்துறையில் முதலில் 1.1.2013ன் படி பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த இயக்குனரிடம் திரு.செ.முத்துசாமி வலியுறுத்தல்.


இன்று மாலை தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு.செ.முத்துசாமி அவர்கள் தொடர்பு கொண்டு 2013-14ம் ஆண்டுக்கான பதவி உயர்வு கலந்தாய்வின் நிலை பற்றி கேட்டறிந்தார்.
அப்பொழுது இயக்குனர் அவர்கள் கலந்தாய்வு நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக தெரிவித்தார். அவற்றில் ஏற்கனவே பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் முதலில் பட்டதாரி ஆசிரியர் மாறுதல் வழங்கிவிட்டு பின்பு பதவி உயர்வு நடத்துங்கள் என்று வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார்.இல்லையெனில் வழக்கிற்கு செல்வதாக அறிவித்துள்ளதாக தெரிவித்தார். மேலும்ஒரு தரப்பினர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தி விட்டு மாறுதல் வழங்குங்கள் என வலியுறுத்தி வருகின்றனர்.

அனைத்து காலிப் பணியிடங்கள் கணக்கெடுப்பு பணிகள் முடிந்த நிலையில் மாறூதல் வழங்கினால் காலிப்பணியிடங்கள் நிலை மாறும் என்றும், இதனால் பல சிக்கல்கள் எழுந்துள்ளதால், அரசின் தெளிவுரை ஆணை வேண்டி அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளதாகவும், அரசின் ஆணை கிடைத்தவுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றுஇயக்குனர் உறுதியளித்ததாக திரு.முத்துசாமி தெரிவித்தார். மேலும் தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களிடம் கலந்தாய்வு நடத்தும் போது முதலில் 01.01.2013ம் முன்னுரிமைப் பட்டியல் அடிப்படையில் தான் நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக அதற்கு இயக்குனர் இசைவு தெரிவித்ததாக அவர் தெரிவித்தார்.

1 comment:

  1. Muthuswamy sir, ask the govt and achieve our promotion before the announcement of Election.
    WE WILL SURELY BEHIND WITH U.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி