வரும் கல்வி ஆண்டில் பிளஸ்1 மாணவர்களுக்கு வகுப்பு முன்னதாக தொடக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 31, 2014

வரும் கல்வி ஆண்டில் பிளஸ்1 மாணவர்களுக்கு வகுப்பு முன்னதாக தொடக்கம்.


வரும் கல்வி ஆண்டில் பிளஸ்1 வகுப்புக்கு செல்லும் மாணவர்களுக்கு நீண்ட நாள் கோடை விடுமுறை அளிப்பதை தவிர்த்து, விரைவில் பள்ளிகளில் அவர்களுக்கு சேர்க்கை நடத்தி வகுப்புகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
வரும் ஜூன் 16ம் தேதி பிளஸ்1 வகுப் புகளை தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப 10ம் வகுப்புதேர்வு முடிவுகள் கடந்த ஆண்டை விட முன்னதாக வெளியிடப்படும். அதாவது நாடாளுமன்றதேர்தல் முடிந்த பின்னர் 10ம் வகுப்பு ரிசலட் வர வாய்ப்புள்ளது.கடந்த ஆண்டு மே 31ம் தேதி 10ம் வகுப்பு ரிசல்ட் வெளியிடப்பட்டு ஜூன் 24ல் பிளஸ்1 வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்தாண்டு 1 வாரம் முன்னதாகவே வகுப்புகள் தொடங்கப்படும்.

தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் பிளஸ்2 மாணவர்களுக்கு கோடை விடுமு றைக்குப் பின்னர் ஜூன் 2ம் தேதி வகுப்புகள் துவங்க உள்ளன. வெயில் காரணமாக சில தனியார் மெட்ரிக் பள்ளிகள் ஜூன் 4ம் தேதி பள் ளிகளைதிறக்க முடிவு செய்துள்ளன. கடந்த ஆண்டு கோடை வெயில் கடுமையாக இருந்ததால் கோடை விடுமுறை நீடிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி