பிளஸ் 2 பொதுத்தேர்வு மொழிப்பாடம் எளிது: தேர்வு எழுதிய மாணவர்கள் மகிழ்ச்சி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 4, 2014

பிளஸ் 2 பொதுத்தேர்வு மொழிப்பாடம் எளிது: தேர்வு எழுதிய மாணவர்கள் மகிழ்ச்சி.


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில்
இருந்து 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வினை எழுதினார்கள்.

மாணவர்களுடன் சென்னை புழல் சிறையில் இருக்கும் 50க்கும் மேற்பட்ட சிறைவாசிகளும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர்.இந்த வருடம் விடைத்தாளில் கொண்டுவரப்பட்ட மாற்றத்தின் படி முதல் பக்கத்தில் மாணவர்களின் பதிவு எண், பாடத்தின் பெயர் போன்ற அனைத்தும் விடைத்தாளில் அச்சிட்டே வழங்கப்படுகிறது. தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களுடைய கையெழுத்தை மட்டும் பதிவு செய்தனர்.இன்று நடந்த மொழித் தேர்வுகளை மாணவர்கள் உற்சாகமாக எதிர்கொண்டனர்.

தமிழ்ப் பாடக் கேள்விகள் மிகவும் எளிதாக இருந்ததாக பெரும்பாலான மாணவர்கள் கருத்து தெரிவித்தனர். ஒரு சில மாணவர்கள் எளிதாகவும் இல்லாமல், கடினமாகவும் இல்லாமல் சராசரியாக இருந்ததாக தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி