*மார்ச் **31: **இயற்பியலின் பிதாமகர் நியூட்டன் நினைவு தினம் இன்று – * - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 31, 2014

*மார்ச் **31: **இயற்பியலின் பிதாமகர் நியூட்டன் நினைவு தினம் இன்று – *


நியூட்டனை இயற்பியலின் பிதாமகர்களில் ஒருவர் என்று தான் இவரை சொல்ல
வேண்டிருக்கிறது .
பள்ளிக்காலத்தில் மக்குப்பையனாக அம்மாவின் அன்புக்கு
ஏங்கிக்கொண்டு இருந்த இவர் இவ்வளவு பெரிய மேதையாக உருவெடுப்பார் என்றால்
அப்பொழுது யாரும் நம்பி இருக்க மாட்டார்கள் தான் .

மண்டையின் மீது ஆப்பிள் விழுந்தது ;புவி ஈர்ப்பு விசை கண்டுபிடிப்பு
நிகழ்ந்தது .அது பூமி சூரியனை சூற்றி வருகிறது என்பதை சந்தேகமின்றி
நிரூபித்தது .இவர் எழுதிய Philosophiæ Naturalis Principia Mathematica நூல்
தான் மெக்கானிக்ஸ் துறையின் வேதமானது . சூரிய ஒளியில் எழு வண்ணங்கள் உள்ளன என
நிரூபிக்கவும் செய்தார் .பயன்படுத்த தகுந்த தொலைநோக்கியையும் நியூட்டன்
வடிவமைத்தார் .

ஹாலி தன்னுடைய வானியல் சார்ந்த குழப்பங்களுக்கான விடையை தேடிக்கொண்டு இருந்த
பொழுது அதை நியூட்டன் ஏற்கனவே கண்டுவிட்டதை கண்டு பூரித்தார். அதை வெளியே கூட
வெளியிடாமல் தன்னுடைய வேலையில் மூழ்கி இருந்தார் நியூட்டன். ஒரே சமயத்தில்
தனித்தனியாக கால்குலஸ் எனும் அற்புதத்தை லிப்னிட்ஸ் மற்றும் நியூட்டன்
கண்டார்கள். யார் அதை கண்டுபிடித்தது என்று சண்டை வேறு போட்டுக்கொண்டார்கள்.
நியூட்டன் பிறருக்கு அதை சொல்லித்தரவோ, எளிமையாக்கவோ மறுக்க லிப்னிட்ஸ் அதை
அன்போடு செய்தார்.

உலகின் பெருமைக்கு உரிய ட்ரினிட்டி கல்லூரியின் மிக முக்கிய பொறுப்பில் இருந்த
பொழுது அரசர் முதலிய யாருடைய பரிந்துரைக்கும் அடிபணிந்து பட்டம் வழங்க
உறுதியாக மறுத்தார். அரசாங்க கஜானாவின் பொறுப்பாளராக இருந்து கள்ளப்பணம்
புழக்கத்தில் ஈடுபட்டவர்களை தூக்கு மேடைக்கு அனுப்பிய கறாரான இன்னொரு முகமும்
அவருக்கு இருந்தது.



இறுதி வரை நியூட்டன் திருமணமே செய்து கொள்ளவில்லை அவருக்கு உடலுறவு
கொள்வதற்கான பயமான எரோடோபோபியா இருந்ததாக சொல்வார்கள் .தன்னை அறிவெனும் கடலின்
ஓரத்தில் கிளிஞ்சல் பொறுக்கும் சிறுவனாகவே சொல்லிக்கொண்டார் அவர் . அவர் கூச்ச
சுபாவம் கொண்டவாரகவே இருந்தார். தன்னை ரஷ்ய மன்னர் சந்திக்க விரும்பிய பொழுது
ஹாலியை தான் அதற்கு அனுப்பி வைத்தார். நாடாளுமன்ற உறுப்பினராக அவரை நியமித்த
பொழுது ஒரே ஒரு முறை தான் அவர் பேசினார் ; அது என்ன தெரியுமா ? "ஒரே
புழுக்கமாக இருக்கிறது. ஜன்னலைத் திறக்க சொல்லுங்கள் ப்ளீஸ் !"

அலெக்சாண்டர் போப்பின் கவிதை தாங்கிய கல்லறையின் மீது தான் நியூட்டன்
மீளாத்துயில் கொண்டிருக்கிறார்

இயற்கை மற்றும் இயற்கையின் ரகசியங்கள் இருளில் மூழ்கி இருந்தன கடவுள்
நியூட்டனை அனுப்பினார்
உலகத்தின் ரகசியங்கள் மீது ஒளி பாய்ந்தன !



மார்ச் 31: தமிழ்நாட்டில் கூடங்குளத்தில் மின் உபயோகத்துக்காக அணுஉலை
அமைக்கும் பணி ஆரம்பம் ஆன நாளும் இன்று.தான்... வருடம் ( 2002 )

என்றும் அன்புடன்
ஸ்ரீ

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி