பிளஸ்2, 10ம்வகுப்பு பொதுத்தேர்வு மையங்களுக்கு, மின்தடையில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி, கலெக்டர்கள், கல்வித்துறை சார்பில், மின்வாரியத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்தாண்டு கடுமையான மின்தடைகாரணமாக, பொதுத்தேர்வு மையங்களில், ஜெனரேட்டர்கள் பயன்படுத்த பட்டன. மார்ச் 3ல் பிளஸ் 2, மார்ச் 26ல் 10ம்வகுப்பு பொதுத்தேர்வு துவங்க உள்ளநிலையில், மின்உற்பத்தி குறைந்ததால், சில நாட்களாக, சராசரியாக தினமும் இரண்டு முதல் மூன்று மணிநேரம் வரை, மின்தடை செய்யப்படுகிறது.இதுமேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, பொதுத்தேர்வு மையங்களுக்கு, மின்தடையில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி, கலெக்டர்கள், முதன்மைக்கல்விஅதிகாரிகள் மூலம், மாவட்ட மின்வாரிய உயர் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.கல்வித்துறை அதிகாரி கூறுகையில்," தேர்வுத்துறை இயக்குனர் ஆலோசனைப்படி, பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கால அட்டவணை, தேர்வு மைய விபரங்கள் குறித்து, அக்கடிதத்தில் விரிவாக குறிப்பிட்டு, தேர்வுநேரத்தில்,அம் மையங்களுக்கு, மின் தடையில் இருந்து விலக்கு அளிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.எனவே, இம்முறை, மின்தடை பிரச்னை இருக்காது என நம்புகிறோம். எனினும், மையங்களில், ஜெனரேட்டரையும் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது,என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி