3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடைபெற்றது.
2004க்குப் பிறகு பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்-அரசு அலுவலர்களுக்கு செயல்படுத்தப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும். 2004 முதல்2006 ஆம் ஆண்டு வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன நாள் முதல் பணிவரன் முறை செய்ய வேண்டும்.ஆசிரியர்களுக்கு பணிச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகளை பள்ளிக் கல்வித்துறைநடைமுறைப்படுத்த வேண்டும் என்ற 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை சிவகங்கை அரண்மனைவாசல் அருகே கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடைபெற்றது.உண்ணாவிரதத்துக்கு ஆசிரியர் உரிமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நீ.இளங்கோ தலைமை வகித்தார்.
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கழக மாவட்டத் தலைவர் மாரிராஜன், முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக பொருளாளர் இரா.இளங்கோவன், உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் சேதுச்செல்வம், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் முத்துப்பாண்டி, மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர் சங்க மாவட்டத் தலைவர் தியாகராஜன், தொழில் கல்வி ஆசிரியர் சங்க மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், தமிழக தமிழாசிரியர் கழக மாவட்டத் தலைவர் மீனாட்சி சுந்தரம், ஆங்கில மொழி ஆசிரியர் கழக நிறுவனர் சேவியர் ஆரோக்கியதாஸ், இடைநிலை ஆசிரியர் சங்க மாநில துணைத் தலைவர் அ.சங்கர், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் அலெக்ஸாண்டர், வரலாற்று ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் பழனியப்பன், ஓவிய ஆசிரியர் கழக மாவட்டப் பொருளாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.பிரெடரிக் எங்கல்ஸ், tnkalviடி.சதீஸ் ஆகியோர் கோரிக்கை விளக்கஉரை ஆற்றினர். முத்துச்சாமி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி