பி.இ., மறுமதிப்பீட்டு முடிவை அண்ணா பல்கலை வெளியிட்டு உள்ளது.கடந்த நவம்பர், டிசம்பரில், பருவத்தேர்வு நடந்தது. இதில் தோல்வி அடைந்தவர்கள் மற்றும்
மதிப்பெண் குறைந்ததாக கருதியவர்கள், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தனர். 1.25 லட்சம் பேர் மறுமதிப்பீடு கேட்டு விண்ணப்பித்ததாக, பல்கலை வட்டாரம் தெரிவித்தது.மறுமதிப்பீடு கோரி வந்த விடைத்தாள்கள், மீண்டும் மறுமதிப்பீடு செய்யப்பட்டன. இதில், இரண்டாம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரையான மறு மதிப்பீட்டு முடிவுகளை மட்டும், www.annauniv.edu என்ற இணையதளத்தில் அண்ணா பல்கலை வெளியிட்டு உள்ளது.முதல் ஆண்டு மாணவர்களுக்கான மறு மதிப்பீட்டு முடிவுகள், ஓரிரு நாளில் வெளியிடப்படும் என, பல்கலை வட்டாரம் தெரிவித்தது.
This comment has been removed by the author.
ReplyDelete