ஆசிரியர்கள் போராட்டம் தொடரும் -ஆசிரியர் மன்றம் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 8, 2014

ஆசிரியர்கள் போராட்டம் தொடரும் -ஆசிரியர் மன்றம் அறிவிப்பு.


தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் செயலாளர், மீனாட்சி சுந்தரம் நேற்று வெளியிட்ட அறிக்கை:அதிமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் கடந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதா கொடுத்தவாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
இதைத் தொடர்ந்து, ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தியுள்ளோம். இந்நிலையில் சட்டப் பேரவை தேர்தல் வாக்குறுதிகளையே நிறைவேற்றாத ஜெயலலிதா, நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, மத்திய அரசில் அங்கம் வகிக்கும் வாய்ப்பை பெற்றால் பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக கூறுகிறார். அதை நாங்கள் நம்பத்தயாராக இல்லை.டிட்டோஜாக் பொதுக்குழு கூடி இறுதிக் கட்டபோராட்ட திட்டத்தை வகுத்து, நாடாளுமன்றதேர்தலுக்கு பிறகு அரசே இயங்க முடியாத அளவுக்கு போராட்டத்தை வலிமையோடு நடத்தும்.டிட்டோஜாக்குடன் இணைந்த 6 சங்கங்கள் மட்டும் அல்லாமல், பல்கலைக் கழகம் வரை ஆசிரியர் இயக்கங்கள் இணைந்து �ஜாக்டி� நடத்தும் அதிரடி பேராட்டமாக விஸ்வரூபம் எடுக்கவும் எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

2 comments:

  1. ஓடி ஒளிந்து கிடந்த பசுத்தோல் போர்த்திய புலியொன்று கூட்டத்தோடு. கோவிந்தாபோட கிளம்பிவிட்டது.

    ReplyDelete
  2. meenakshi sundaram unga thalaivarthan thappu thappa secondary grade teacherkku pay fix panninar. appo thoonkitu iruntheengala.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி