அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் வழங்க சத்துணவு பணியாளர்கள் கோரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 3, 2014

அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் வழங்க சத்துணவு பணியாளர்கள் கோரிக்கை.


அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என அரசுக்கு தமிழ்நாடு சத்துணவு பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இச்சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் மடப்புரம் சமுதாயக்கூடத்தில் மாநிலத் தலைவர் சே.க.விஜயபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.தீர்மானங்கள் வருமாறு:

சத்துணவுக்கு தனித்துறை உருவாக்க வேண்டும். சத்துணவு பணியாளர்களை முழுநேர பணியாளராக்க வேண்டும். பணிவிதிகளை ஏற்படுத்தி, பணிவரன்முறைசெய்து காலமுறை சம்பளம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் ரூ.1,000-ம் என்பதை மாற்றி, அரசுவிதிப்படி ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி