கல்லூரி ஆசிரியர் ஆராய்ச்சி பணிக்கு உதவித்தொகை ரூ.1 லட்சமாக அதிகரிப்புபயனாளிகளின் எண்ணிக்கை 5 மடங்காக உயர்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 2, 2014

கல்லூரி ஆசிரியர் ஆராய்ச்சி பணிக்கு உதவித்தொகை ரூ.1 லட்சமாக அதிகரிப்புபயனாளிகளின் எண்ணிக்கை 5 மடங்காக உயர்வு.


அரசு கலை, அறிவியல் கல்லூரி ஆசிரியர்களுக்கான ஆராய்ச்சி உதவித்தொகை ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக இந்தஆண்டு அதிகரிக்கப்படுகிறது.
இத்திட்டத்தில் பயன் பெறு வோரின் எண்ணிக்கையும் 5 மடங்கு உயர்த்தப்பட உள்ளது.தமிழகத்தில் 74 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. ஆராய்ச்சித் திறனை ஊக்குவிக்கும் வகையில், அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சிறு ஆய்வு திட்டத்தின் கீழ் உதவித் தொகையாக ரூ.20 ஆயிரமும் முதுகலை மாணவர்களுக்கு குறுஆய்வு திட்டத்தின் கீழ் ரூ.15 ஆயிரமும்வழங்கப்பட்டு வந்தது.இந்த உதவித்தொகை திட்டங்களின்கீழ் ஆண்டுதோறும் 20 ஆசிரியர்களும், 20 மாணவ, மாணவிகள் மட்டுமே பயன்பெற்று வந்தனர்.இந்நிலையில், அரசுக் கல்லூரி ஆசிரியர்களையும் மாணவர் களையும்ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட ஊக்குவிப்பதற்காக உதவித்தொகை மற்றும் அதை பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசுமுடிவு செய்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் உறுப்பினர்-செயலாளர் பேராசிரியர் கரு.நாகராஜன், ‘தி இந்து’விடம் கூறியதாவது:அரசு கலைக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சிறு ஆய்வுதிட்டத்தின் கீழ் புதிய விஷயங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக மாநில உயர்கல்வி கவுன்சிலுக்கு விண்ணப்பிக்கலாம்.முதலில் தாங்கள் மேற் கொள்ள உள்ள ஆராய்ச்சி குறித்து கருத்துருவை அனுப்ப வேண்டும். நிபுணர் குழு ஒப்புதல் அளித்தால் அந்த ஆராய்ச்சிப் பணிக்கு உதவித்தொகை வழங்கப்படும்.இதுவரை, 20 ஆசிரியர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டு வந்தது.

வரும் கல்வி ஆண்டு முதல் இந்த உதவித்தொகை ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பயனாளிகளின் எண்ணிக்கையும் 20-ல் இருந்து 100 ஆக உயர்த்தி வழங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.100 மாணவர்கள்குறு ஆய்வு திட்டத்தின் கீழ், அரசு கலைக் கல்லூரிகளில் முதுகலை முதல் ஆண்டு, 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டி விண்ணப்பிக்கலாம். அனுமதிக்கப்படும் ஆராய்ச்சிப் பணிக்கு ரூ.15,000 வழங்கப்படும். வரும் கல்வி ஆண்டு முதல் இந்த திட்டத்தின் கீழ் 100 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.இவ்வாறு பேராசிரியர் கரு.நாகராஜன் தெரிவித்தார்.

1 comment:

  1. இதுபோன்ற திட்டங்கள் பள்ளி ஆசிரியர்களிக்கும் பள்ளி கல்வி துறை எற்படுத்தி தரலாமே

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி