10ம் வகுப்பு கணக்கு கேள்வித்தாள் கடினம் : மாணவர்கள் புலம்பல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 5, 2014

10ம் வகுப்பு கணக்கு கேள்வித்தாள் கடினம் : மாணவர்கள் புலம்பல்


பத்தாம் வகுப்பு கணக்கு தேர்வில் வழங்கப்பட்ட கேள்வித்தாள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கியது. மொழித்தாள்கள் ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிந்தன. நேற்று கணக்கு தேர்வு நடந்தது. இந்த தேர்வில் வழங்கப்பட்ட கேள்வித்தாள் சராசரி மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு கடினமாக இருந்ததாக தெரிவித்தனர். குறிப்பாக காரணிப்படுத்துதல், வர்க்கமூலம் பார்த்தல், கிராப் போன்றவை எளிதாக இருந்தாலும்,5 மதிப்பெண் கேள்விகள் கடினமாக இருந்தன. கட்டாய கேள்வி மிகவும் கடினமாக இருந்தது.இது தவிர பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய கேள்விகளில் பெரும்பாலான கேட்கப்படவில்லை.

இதனால் சராசரி மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் இந்த முறை சென்டம் எடுக்க வாய்ப்பில்லாமல் போகும். அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களில் பலர் கட்டாய கேள்வி கடினமாக இருந்ததாகவே தெரிவித்தனர்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி