நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களில் கர்ப்பிணிகள், கை குழந்தை வைத்திருக்கும் ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரயர் கூட்டணியினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதுகுறித்து அக்கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் தாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் பணியில் நியமித்து அதற்கான ஆணையை தேர்தல் ஆணையம் வழங்கி வருகிறது.இதில் 150 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் சென்று பணி புரிய உள்ளதாலும், ஒருநாளைக்கு முன்பே செல்ல வேண்டியுள்ளது. இதனால் கர்ப்பிணி ஆசிரியர்கள், கை குழந்தை வைத்திருக்கும் ஆசிரியர்கள் ஆகியோர் கடும் மன உளைச்சலுக்கும், சிரமத்துக்கும் ஆளாகியுள்ளனர்.குறிப்பாக மாற்றுத் திறனாளிகளுக்கும் இதில் விலக்கு அளிக்கவில்லை. எனவே தேர்தல்ஆணையத்தினர் உரிய பரிசீலனை செய்து இவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். அல்லதுகுடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் பணியிடங்களை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி