தமிழகத்தில் 13 அரசுக் கலைக்கல்லூரிகள் கிரேடு 1 அந்தஸ்துக்கு தரம்உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 7 பிஎட் அரசுக் கல்லூரிகள் மற்றும் 62 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வந்தன. கடந்த ஆண்டு கோவில்பட்டி, சிவகாசி உள்ளிட்ட மேலும் 12 அரசுக் கலைக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. தற்போது, 74 அரசு கலைக் கல்லூரிகளும், 7 பிஎட் அரசுக் கல்லூரிகளும் உள்ளன. இந்தக் கல்லூரிகளின் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை, உயர்கல்வி வசதி உள்ளிட்ட பல்வேறு தகுதிகளின் அடிப்படையில், கிரேடு 1 மற்றும் கிரேடு 2 என்ற தகுதியை அரசு வழங்கி வருகிறது.ஏற்கனவே 23 கல்லூரிகள் கிரேடு 1 தகுதியை பெற்றுள்ளன. இந்த நிலையில் இந்த ஆண்டு மேலும் 13 கல்லூரிகள் கிரேடு 2ல் இருந்து கிரேடு 1 அந்தஸ்தை பெற்றுள்ளதாக அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக்கல்லூரிகள் பட்டியல்வருமாறு: வாலாஜா, குடியாத்தம், விழுப்புரம், கடலூர், விருத்தாச்சலம், அரியலூர்,திருப்பூர் எல்ஆர்ஜி அரசு கல்லூரி, திருப்பூர் சிக்கன்னா கலைக்கல்லூரி, உடுமலைப்பேட்டை, நாமக்கல் பெண்கள் கல்லூரி, சேலம், மன்னார்குடி, சிவகங்கை ஆண்கள் கலைக்கல்லூரி ஆகியவை புதிய கல்வி ஆண்டு முதல் கிரேடு 1 கல்லூரியாக தகுதி உயர்வு பெற்றுள்ளன.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி