ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வலியுறுத்தல் -மாவட்டச் செயலாளர் முருகசெல்வராஜ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 27, 2014

ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வலியுறுத்தல் -மாவட்டச் செயலாளர் முருகசெல்வராஜ்


பரமத்தி வட்டாரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் செயற்குழுக் கூட்டத்தில்,

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வை
உடனடியாக நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் செயற்குழுக் கூட்டம் பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அதன் வட்டாரத் தலைவர் சின்னுசாமி தலைமை தாங்கினார்.

மாவட்டச் செயலாளர் முருகசெல்வராஜ் , பொருளாளர் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

2014-2015-ஆம் ஆண்டுக்கான தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்திடும் வகையில், தொடக்கக் கல்வி இயக்குநர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும். பரமத்தி வட்டாரத்தில் பணிபுரியும் 15-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு 2013, ஜூலை மாதத்துக்கான அகவிலைப்படி நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அந்தக் கூட்டணியின் வட்டாரச் செயலாளர் சேகர் , மாவட்ட முன்னாள் செயலாளர் மாதேஷ், ஆசிரிய , ஆசிரியைகள் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் சாந்தி நன்றி கூறினார்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி