கேரள முதல்வர் உம்மன்சாண்டிக்கு அதிகாரபூர்வ பேஸ்புக் கணக்கு உள்ளது. இதில் நேற்று அவர் சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார். நாட்டில் வரதட்சணை கொடுமை தலைவிரித்தாடுகிறது.
அரசு ஊழியர்களுக்குத் தான் எப்போதும் திருமண மார்க்கெட்டில் டிமாண்ட் அதிகமாக உள்ளது. இவர்களுக்கு கேட்ட தொகை வரதட்சணையாக கிடைக்கும். எனவே வரதட்சணைக் கொடுமையை நிறுத்த வேண்டுமென்றால் முதலில் அரசு ஊழியர்களுக்குத் தான் மூக்குக் கயிறு போடவேண்டும். வரதட்சணை வாங்குபவர்களை தண்டிக்க சட்டத்தில் இடம் உள்ளது. அரசு ஊழியர்கள் வரதட்சணை வாங்கி திருமணம் செய்தால் அவர்களின் வேலை பறிபோகும் ஆபத்தும் உள்ளது. எனவே திருமணம் செய்யும் அரசு ஊழியர்கள் தங்களது துறை தலைவ ருக்கு, தான் வரதட்சணை வாங்கவில்லை என ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க வேண்டும். மேலும் அரசு ஊழியரின் மனைவி மற்றும் மாமனார் ஆகியோர் அந்த ஒப்புதல் வாக்குமூலத்தில் கையெழுத்து போடவேண்டும். இவ்வாறு அவர் பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி