அஸ்திரா ஏவுகணை சோதனையும் வெற்றிகரம் - தினமணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 5, 2014

அஸ்திரா ஏவுகணை சோதனையும் வெற்றிகரம் - தினமணி







முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, விமானத்தில் இருந்து ஏவப்பட்டு வானில் இலக்கைத் தாக்கக் கூடிய அதிநவீன "அஸ்திரா' ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக ஏவி பரிசோதித்துள்ளது.

இது தொடர்பாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் (டிஆர்டிஓ) வெளியிட்ட செய்திக்குறிப்பில், "உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட "அஸ்திரா' ஏவுகணையை, நாட்டின் மேற்குப்பகுதியில் உள்ள கடற்படை விமான தளத்தில் சு-30 போர் விமானத்தில் இருந்து விமானப்படை ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக ஏவியது' என்று தெரிவித்துள்ளது. இது இந்தியா உருவாக்கியுள்ள முதல் பி.வி.ஆர். ரக ஏவுகணையாகும். அனைத்து தட்பவெப்பச் சூழ்நிலைகளிலும் செலுத்தக் கூடியது இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதற்காக டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு அந்த அமைப்பின் தலைவர் அவினாஷ் சந்தர் வாழ்த்து தெரிவித்துள்ளஆர். அவர் கூறுகையில், ""இந்த ஏவுகணை விரைவில் உண்மையான இலக்கு ஒன்றைத் தாக்குவதற்காக மீண்டும் சோதிக்கப்பட உள்ளது.

அதன் பின் இலகு ரக விமானமான தேஜஸýடன் இணைக்கப்படும். இந்தச் சோதனையானது, விமான-ஏவுகணை ஒருங்கிணைப்பில் மிக முக்கிய வளர்ச்சியாகும்'' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி