தமிழக சட்டப்பேரவை கூட்டம் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில்நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து சட்டப்பேரவை குழுக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 27, 2014

தமிழக சட்டப்பேரவை கூட்டம் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில்நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து சட்டப்பேரவை குழுக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.


2014&2015ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 13ம் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 4 நாள் பட்ஜெட் மீது விவாதம் நடத்தப்பட்டு சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
வழக்கமாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும், பட்ஜெட் மீதான பொது விவாதம் நடத்தப்பட்டு பதிலுரை முடிந்ததும், தொடர்ந்து துறை வாரியான மானிய கோரிக்கை பேரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். இந்த கூட்டம் ஒரு மாதம் வரை நடைபெறும். ஆனால், நாடாளுமன்ற மக்களவை தேர்தலையொட்டி மானிய கோரிக்கை கூட்டம் நடத்தப்படவில்லை.

தற்போது தேர்தல் முடிந்து, பிரதமர் பதவியேற்பு விழாவும் முடிந்ததையடுத்து ஜூன் மாதம் 2வது வாரத்தில் அதாவது 12 அல்லது 13ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாககூறப்படுகிறது. இந்த கூட்டம் சுமார் ஒரு மாதம் நடைபெறும். அப்போது ஒவ்வொரு துறை வாரியான மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 2வது வாரம் கூடுகிறது.

பேரவை குழுக்கள் மாற்றி அமைப்பு:

வழக்கமாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும், பட்ஜெட் மீதான பொது விவாதம் நடத்தப்பட்டு பதிலுரை முடிந்ததும், தொடர்ந்து துறை வாரியான மானிய கோரிக்கை பேரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். இந்த கூட்டம் ஒரு மாதம் வரை நடைபெறும். ஆனால், நாடாளுமன்ற மக்களவை தேர்தலையொட்டி மானிய கோரிக்கை கூட்டம் நடத்தப்படவில்லை.

தற்போது தேர்தல் முடிந்து, பிரதமர் பதவியேற்பு விழாவும் முடிந்ததையடுத்து ஜூன் மாதம் 2வது வாரத்தில் அதாவது 12 அல்லது 13ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாககூறப்படுகிறது. இந்த கூட்டம் சுமார் ஒரு மாதம் நடைபெறும். அப்போது ஒவ்வொரு துறை வாரியான மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் மாதம் பேரவை கூட்டம் நடைபெற இருப்பதாலும், மந்திரிசபை மாற்றப்பட்டதாலும் சட்டப்பேரவை குழுக்கள் நியமன உறுப்பினர்களை மாற்றி அமைத்து பேரவைத்தலைவர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி சட்டமன்ற பேரவை அலுவல் ஆய்வு குழு உறுப்பினராக இருந்த கேபி.முனுசாமி நீக்கப்பட்டு, அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். பொது கணக்கு குழு தலைவராகஇருந்த எம்எல்ஏ பண்ருட்டி ராமச்சந்திரன் ராஜினாமா செய்ததையடுத்து, பார்வர்டு பிளாக் எம்எல்ஏ பி.வி.கதிரவன் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று அரசு உறுதிமொழி குழு தலைவராக இருந்த ஆர்.பி.உதயகுமார் அமைச்சரானதையொட்டி, அப்பதவி எம்எல்ஏ ஏ.கே.போஸ் இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி