அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி தொடக்கம் பள்ளி கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 11, 2014

அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி தொடக்கம் பள்ளி கல்வித்துறை உத்தரவு.


அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி தொடங்க வேண்டும்’ என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இப்போது ஒரே மாதிரியான பாடத்திட்டம் அமலில் உள்ளது. அப்படி இருந்தும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறைந்து வருகிறது. குறிப்பாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள்ஆங்கிலத்தை நுனி நாக்கில் பேச வேண்டும் என்பதற்காக தனியார் பள்ளிகளில் அவர்களை சேர்க்கின்றனர்.இதையடுத்து அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க கடந்த ஆண்டு 3 ஆயிரத்துக்கும் அதிகமான அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டது. இதன் காரணமான மாணவர்களின் சேர்க்கை அதிகரித்தது. கடந்த ஆண்டு தொடக்கப்பள்ளிகளில் 1 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்தனர்.இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:2012-2013ம் கல்வி ஆண்டில் ஆங்கில வழிக்கல்வி மாதிரி திட்டமாக கொண்டுவரப்பட்டது. கடந்த கல்வி ஆண்டில் 4 ஆயிரம் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டது. அப்போதே பல பகுதிகளில் உள்ள பெற்றோர்கள் தங்கள் பள்ளியிலும் ஆங்கில வழிக்கல்வி வேண்டும் என்று கேட்டனர்.

இதை ஏற்று வரும் கல்விஆண்டில் ஆங்கில வழிக்கல்வி வகுப்பை தொடங்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை இயக்குனர் அனுப்பிய சுற்றறிக்கையில், ‘ஆங்கில மொழித்திறனை மேம்படுத்தும் வகையில் ஆங்கில வழிக்கல்வியை தொடங்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. பள்ளி தொடங்கும் நாளிலே ஆங்கிலவழிக்கல்வியை தொடங்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட உள்ளது’ என்றார்.

5 comments:

  1. Separate and dedicated teachers will be appointed for taking English medium class. Other wise opening of new English medium class no use.and it will spoil the purpose

    ReplyDelete
  2. private school la irunthu eaelmaiyana parents avunga pilaigalai atleast 1 or 2 percent ,govt school la serthuvanga english medium vanthullathal, so govt school strengh increase aagum ,athanal athiga teachers ku job kidaikum..

    ReplyDelete
  3. Mere opening of English medium without appointing new teaching will not solve the problems.

    ReplyDelete
  4. Tomorrow CV process gets over. So next move will be towards our appointment. Don't confuse and worry about dhinamalar news. Congrats.

    ReplyDelete
  5. Even in Gov school also lot of intellectual students are there but they are not provided with proper situations and advancements.. if the government initiate English medium coaching means it improve their life status and put forth them in the race with other board matric cbse students and wash out inferiority with other boards...aim towards high..without trendy fashionate 10000000.... fee of cbsc international board.. its really appreciated one but don't forget to take tamil as on of the language(compulsory)

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி