சனிக்கோளின் நிலவில், புதிய தீவு உருவாகியிருப்பதை, அமெரிக்காவின் காசினி விண்கலம், படம்எடுத்து அனுப்பி உள்ளது. இதுகுறித்து,
தலைமை ஆய்வாளரும், கார்னெல் பல்கலைக் கழகத்தில், வானியல் சாஸ்திரத்தில் ஆய்வு செய்து வரும் மாணவருமான, ஜேசன் ஹாப்கார்ட்டர் கூறியதாவது:
சனிக்கோளின் நிலவான டைட்டனை ஆய்வு செய்ய, காசினி விண்கலத்தை, நாசா அனுப்பியது.இந்த விண்கலம் கடந்த ஆண்டு, ஜூலை 10ம் தேதி, கலிபோர்னியா தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் உள்ள, புரோபல்ஷன் ஆய்வகத்திற்கு, டைட்டனின் படங்களை அனுப்பியது. இந்த புகைப்படங்களுடன், பழைய படங்களை ஒப்பிடுகையில், டைட்டனின் வடதுருவப் பகுதியில் உள்ள, இரண்டாவது மிகப் பெரிய கடல் தீவுப் பகுதி உருவாகி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு, 'ரகசிய தீவு' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த தீவு உருவானதற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு ஜேசன் கூறியுள்ளார். சனிக்கோளின் நிலவான டைட்டனின் வானிலை, பூமியின் வானிலையை போன்று நீடித்து காணப்படுகிறது. இதுகுறித்த ஆய்வுக் கட்டுரை, 'நேச்சர் ஜியோசயின்ஸ்' பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
the great nasa..............,
ReplyDelete