திருக்குறளுக்கு இசையமைக்கும் பணி நிறைவு: "1 லட்சம் குறுந்தகடுகள் இலவசமாக விரைவில் வழங்கப்படும்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 10, 2014

திருக்குறளுக்கு இசையமைக்கும் பணி நிறைவு: "1 லட்சம் குறுந்தகடுகள் இலவசமாக விரைவில் வழங்கப்படும்'

திருக்குறளுக்கு இசையமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. விரைவில் 1 லட்சம் குறுந்தகடுகள் இலவசமாக வெளியிடப்படும் என்றார் இசையமைப்பாளர் பரத்வாஜ்.தென்காசி திருவள்ளுவர் கழகம் மற்றும் மூத்த குடிமக்கள் மன்றம் சார்பில் இசையமைப்பாளர் பரத்வாஜுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

திருக்குறளின் 1330 குறள்களுக்கும் இசையமைத்து குறுந்தகடாக வெளியிட உள்ள அவரின் அரிய சேவையைப் பாராட்டி இந்ப் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி திருவள்ளுவர் கழகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மூத்த குடிமக்கள் மன்றத் தலைவர் துரை.தம்புராஜ் தலைமை வகித்தார். செயலர் ஆ.சிவராமகிருஷ்ணன் விளக்கவுரையாற்றினார்.

இதில், இசையமைப்பாளர் பரத்வாஜ் பேசியதாவது:

திருக்குறளை சாதாரண மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் என்னுடைய நோக்கம். அதற்காக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை ஒருங்கிணைத்து பெருமுயற்சியுடன் திருக்குறளுக்கு இசையமைத்து, இப்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஒரு லட்சம் சி.டி.க்கள் தயாரித்து அதனை உலகம் முழுவதுமுள்ள தமிழர்களுக்கு வழங்க ஏற்பாடுகளை செய்து வருகிறேன். அவற்றை இலவசமாக வழங்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறேன் என்றார் அவர்.

சீதாராமன், புலவர் செல்வராஜ், பேராசிரியர் ராமச்சந்திரன்,கணபதிசுப்பிரமணியன், ராஜாமுகம்மது ஆகியோர் பேசினர்.

3 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி