தஞ்சாவூரில் தொடங்கியுள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 1, 2014

தஞ்சாவூரில் தொடங்கியுள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.


தஞ்சாவூரில் தொடங்கியுள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்கள், இணைய தளம் மூலம் தேர்வு செய்யப்பட்ட இடங்களுக்கு உடனுக்குடன் பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளைச் சேர்ந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு, தஞ்சாவூரில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. நேற்றும், இன்றும் மொத்தம் 261 இடைநிலை ஆசிரியர்கள் கலந்துகொண்டு இணைய தளம் மூலம் காலி பணியிடங்களை தேர்வு செய்த ஆசிரியர்களுக்கு உடனுக்குடன் பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

நேர்மையாக நடைபெற்ற இந்த கலந்தாய்வின் மூலம் தாங்கள் விரும்பிய பள்ளிகளுக்கு எவ்வித சிரமமும் இன்றிபணிமாறுதல் பெற்றுள்ளதாக, ஆசிரியர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும், பணிமாறுதல் நடவடிக்கையை எளிமையாக்கி, ஆசிரியர்களின் சிரமத்தை போக்கிய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, கலந்தாய்வில் கலந்துகொண்டவர்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

2 comments:

  1. Thanjavuril mattum sariyaka nadantha? achariyamaga irukku!

    ReplyDelete
  2. endraikku therivul irukku edho oru internet centeril nulainthu, kaliyidangalai parkka mudikiratho andraikkuthan idhu niyamaga nadantha sollmudiyum Kalanthaiivu nadathupavarkalai anna university in kalainthaivai parkka sollungal

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி